மொத்தப் பக்கக்காட்சிகள்

யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் - நிலையான வளர்ச்சிக்காக தரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள்..!


யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் -  நிலையான வளர்ச்சிக்காக தரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள்..!

நிறைவேறக் கூடிய நியாயமான நிதிஇலக்குகளை  உருவாக்குவது, வெற்றிகரமான முதலீட்டிற்கான முதல் படியாகும். உங்கள் இலக்குகளை அடைய,  முதலீட்டு வாய்ப்புகளை நன்கு புரிந்துகொள்வது மிக முக்கியமாகும். உங்களின் முதலீட்டு இலக்குகள் நீண்ட காலத்துக்குஅல்லது  குறுகிய காலத்துக்கு என எதுவாக இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட்  சரியாக பொருந்த கூடும். ஆனால், ஒருவரின் நிதி இலக்கிற்கான திட்டம் வெற்றி பெறுவது என்பது அவர் தேர்ந்தெடுத்த ஃபண்ட் வகைகளை பொறுத்திருக்கும். யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் (UTI Equity Fund) என்பது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் யூனிட்களை விற்று பணமாக்கும் ஓப்பன் எண்டெட் பங்குச் சந்தை சார்ந்த திட்டம் (open ended equity scheme) ஆகும். 

இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, லார்ஜ் கேப். மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்டின்  மூலம் ரூ. 8,345 கோடி நிர்வகிக்கப்படுகிறது. 2018 நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி இந்த ஃபண்டின் மீது நம்பிக்கை வைத்து 11.83  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். 

எந்த ஒரு நீண்ட கால முதலீட்டாளரும் அவரின் பிரதான பங்குச் சார்ந்த முதலீட்டு கலவைக்கு (core equity allocation), யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் இந்த ஃபண்டை கவனிக்கலாம்.

2018 நவம்பர் நிலவரப்படி, யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட், அதன் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து அதிக வருமானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஃபண்ட் அதன் பெஞ்ச் மார்க் ((S&P BSE 200 TRI) -ஐ விட 2.35% அதிக ஆல்பா மற்றும் இந்த ஃபண்ட் பிரிவின் கீழ் வரும் ஃபண்ட்களின் சராசரி வருமானத்தை விட 8.48% அதிகமாக வருமானத்தை கடந்த ஓராண்டு காலத்தில் கொடுத்திருக்கிறது. யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட்-ன் அதிக ஆல்பா அது அந்த ஃபண்ட் பிரிவில் அது சிறந்து முன்னணியில் விளங்குகிறது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் சிறந்து விளங்க அதன் முதலீட்டு தத்துவம், தரம், வளர்ச்சி மற்றும் மதிப்பீடு (Quality, Growth & Valuation) ஆகிய மூன்று தூண்களை சுற்றி அமைக்கப்பட்டிருப்பதாகும். இதன் ஃபண்ட்களை தேர்வு செய்யும் முதலீட்டுக் கலவையின் உத்தியானது, உயர்தரமான வணிகம் / தொழில்களை கொண்ட நிறுவனங்களாக அவை நீண்ட காலத்தில் நன்றாக வளர்ச்சி அடையக் கூடியதாகவும் சிறந்த நிர்வாகத்தை கொண்டதாகவும் இருக்கின்றன.

தரம்என்பது, நீண்ட காலத்தில் நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட மூலதனம் மூலமான வருமானம் ((Return on capital employed - RoCE)) அல்லது  பங்கு மூலதனம் மீதான வருவாய் (Return on Equity -RoE)  நிலையாக மற்றும் அதிகமாக இருக்கும் திறனை குறிக்கிறது. உண்மையாக அதிக தரம்  கொண்ட வணிகங்கள் / தொழில், அதிக ஆர்ஓசிஇ மற்றும் அதிக ஆர்ஓஇ  கொண்டிருக்கும். தொழில் அல்லது துறையின் கஷ்டமான காலத்தில் கூட அதாவது அனைத்து காலத்திலும் அதன் மூலதன செலவுக்கு மேலாக சிறப்பாக செயல்படும். இதனையும் தாண்டி, அதிக ஆர்ஓசிஇ / ஆர்ஓஇ இருக்கும் தொழில்கள் வலிமையான பண வரத்தை (cash flow) கொண்டிருக்கும். இது பொருளாதார மதிப்பை உருவாக்க ஆதாரமாக இருக்கும்.

வளர்ச்சி  நீண்ட காலத்தில் அந்த வணிகம் / . தொழில் குறிப்பிட்ட வளர்ச்சி அடைவதை குறிக்கும். இந்த ஃபண்டில் நிலையான மற்றும் கணிக்க கூடிய வளர்ச்சி கொண்ட தொழில்களை சேர்ந்த நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்கு தேர்வு செய்யப்படுகின்றன. சுழற்சி முறையிலான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியைக் கணிக்க முடியாத தொழில்களை கொண்ட நிறுவனப் பங்குகள் கூடிய வரையில் தவிர்க்கப்படுகின்றன. சுழற்சி முறையிலான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியைக் கணிக்க முடியாத தொழில்களை கொண்ட நிறுவனப் பங்குகளின்  முதலீட்டு மூலமான வருமானம் என்பது எந்தத் திசையிலும் செல்லலாம். உயர்தரமான தொழில்கள் பொருளாதார மதிப்பை உருவாக்கும் நிலையில், அதிக வளர்ச்சி தொழில்கள் கூட்டு பொருளாதார வளர்ச்சி உருவாக்கும். இதுதான் இந்த ஃபண்ட், தரம் மற்றும் வளர்ச்சி அடிப்படையிலான பங்குகளை தேர்வு செய்வதற்கான காரணமாகும்.

இந்த ஃபண்டின் முதலீட்டு தத்துவத்தின் கடைசி தூண் மதிப்பீடு ஆகும். மதிப்பீடு, மிகவும் முக்கியம். அது பெரிய வணிகத்தில் ஒரு நுழைவு புள்ளியாக இருக்கிறது. அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் பங்கை முதலீட்டுக்கு தேர்வு செய்யும் முன் மிகவும் கவனமாக ஆராய்வது அவசியம். மேலும், ஒரு தொழில்/ வணிகத்தின் மதிப்பீட்டை புரிந்துகொள்வதற்கு பி/இ விகிதம் ஒரு சிறந்த ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. ஆனால், இது பரவலாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அடிக்கடி, நீண்ட காலத்தில், அதிக ஆர்ஓசிஇ மற்றும் அதிக வளர்ச்சி வணிகத்தை விட அதிக பி/இ விகிதம் கொண்ட பங்குகள் முதலீட்டுக்கு கவர்ச்சிகரமாக இருக்கும். அடுத்த சில மாதங்கள் அல்லது காலாண்டில் சிறப்பாக செயல்படும் என்பதை விட வணிக்கத்தின் அடிப்படையை பார்த்து முதலீடு செய்வது அதிக லாபகரமாக இருக்கும். எனவே, பி/இ அடிப்படையில் முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன் ஒவ்வொரு வணிகம் / தொழிலின் தன்மைகளை கவனமாக ஆராய்வது அவசியம். அதன் பிறகு அவற்றின் நியாயமான மதிப்பை பெற வேண்டும்.

இந்த ஃபண்ட்டின் வளர்ச்சி பாணி முதலீட்டு முறையில் அனைத்து சந்தை மதிப்புகளை கொண்ட (market capitalization) நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய முயற்சி செய்கிறது. யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட், பிரதான பங்குச் சார்ந்த முதலீட்டு கலவையை உருவாக்க விரும்பும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். மேலும், தரமான வணிகங்கள் / தொழில்களில் முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் பொருளாதார மதிப்பு உருவாக்கத்தை எதிர்பார்ப்பதாக இருக்கிறது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...