14வது CavinKare-MMA
ChinniKrishnan Innovation விருதுகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்பு
~ புதுமையான பிஸினஸ் மாடல்களை
கொண்டிருக்கும், 2023-24 நிதி ஆண்டில் ரூ50 கோடிக்கு மிகாமல் ஆண்டு வருமானம்
ஈட்டியுள்ள ஸ்டார்ட்அப் மற்றும் MSMEகள் இவ்விருதுகளுக்காக விண்ணப்பிக்கலாம்~
தமிழ்நாடு, 3 ஜூன், 2025: கவின்கேர்
நிறுவனம், மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன்(MMA) உடன் இனைந்து திறன்மிக்க
தொழில்முனைவோர்களை அடையாளம் காணும், சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள் 2025 (ChinniKrishnan
Innovation Awards 2025) 14வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை
வரவேற்பதாக அறிவித்துள்ளது.
நிதியாண்டு 2023-24-ல் ரூ.50 கோடிக்கு மிகாமல்
வருவாய் ஈட்டியுள்ள புதுமையான பிஸினஸ் மாடல்களை
கொண்டிருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEகள்) மற்றும் ஸ்டார்ட்அப்
(startup) நிறுவனங்கள் இந்த
விருதிற்கு www.ckinnovationawards.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது +91 63746 03433 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து
தேவையான விவரங்களை வழங்கலாம். இவ்விருதுக்கான விண்ணப்ப பதிவுகளை சமர்ப்பிப்பதற்கான
இறுதி தேதி 1 ஜுலை, 2025 என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் கவின்கேர் நிறுவனம் சாச்செட்களின்
தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த திரு. ஆர். சின்னிகிருஷ்ணன் அவர்களின்
நினைவைப்போற்றி, திறன்மிக்க தொழில் முனைவோர்களை கண்டறிந்து, அவர்களின் புதுமையான
தயாரிப்புகள், சேவைகளின் தனித்தன்மை, நிலைத்தன்மை மற்றும் சமூகத்தில் ஏற்படுத்திய
தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விருதுகளை வழங்கி
கௌரவித்து வருகிறது.
இந்த விருது குறித்து பேசிய கவின்கேர்
நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு CK ரங்கநாதன், “சின்னிகிருஷ்ணன்
இன்னோவேஷன் விருதுகள், அன்றாட
வாழ்வில் அர்த்தமுள்ள தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய
திறமையான தொழில்முனைவோர்களின் புதுமைகளை ஊக்குவிப்பதை தனது மையக் கொள்கையாகக்
கொண்டுள்ளது. மரபுகளுக்கு எதிராகச் சிந்திக்கத் துணியும் மற்றும் சமூக
முன்னேற்றத்திற்கான தெளிந்த கனவையும் கொண்ட தொழில்முனைவோர்களை இந்த விருதுகள்
கண்டறிந்து பெருமையுடன் கௌரவித்து வருகிறது. மேலும், எதிர்கால மாற்றத்திற்கான
முன்னோடிகளை உருவாக்கும்
உறுதியான தொடக்க மேடையாகவும், ஊக்குவிக்கும் ஒரு வலுவான தளமாக இது திகழ்கிறது,” என்று
தெரிவித்தார்.
இதில் வெற்றி பெறுவோருக்கு விருதுடன் ரூ.1 இலட்சம்
ரொக்கப்பரிசும் வழங்கப்படும். மேலும் மார்கெட்டிங், பிராண்டிங்
மற்றும் பேக்கேஜிங் ஆதரவு, காப்புரிமை
மனு தாக்கல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான வழிகாட்டுதல், நிதி ஆலோசனை
மற்றும் மனிதவள ஆலோசனை சேவைகள், ஒரு
ஆண்டிற்கு தொழில் நுட்ப நிபுணர்களுடன் நேரடி அணுகல், வங்கிகள்
மற்றும் நிதி நிறுவனங்களுடன் மூலதன இணைப்புகள் போன்ற பல்வேறு
உதவிகளும் வழங்கப்படும்.
2011-ம் ஆண்டு நிறுவப்பட்ட CavinKare-MMA
சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள், இதுவரை பல்வேறு வகையினங்களின் கீழ், 50 –
க்கும் மேற்பட்ட தொழில்முனைவு ஆர்வத்தையும், திறனையும்
அங்கீகரித்து கௌரவித்திருக்கிறது.
ChinniKrishnan Innovation
Awards (சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள்) குறித்து: சாச்செட்களின்
தந்தை என்று போற்றப்படும் மறைந்த திரு. ஆர். சின்னிகிருஷ்ணன்
அவர்களை, அவர் ஒரு இலட்சிய கனவுகாண்பவர், புதிய
படைப்பாளி, சிந்தனைச் சிற்பி, தொழில்முனைவோர்
என்று ஒரு சில வார்த்தைகளில் விவரித்துவிடமுடியாது. 'பணக்காரர்கள்
வாங்கி அனுபவித்து மகிழும் பொருட்கள், ஏழை மனிதனும்
வாங்கி பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்' என்ற எளிய
கோட்பாட்டின் அடிப்படையில் அவரது சிந்தனைகள் அமைந்திருந்தது. இன்றைக்கு அவரது
புதுமையான செயல்பாடுகளை சாச்செட்கள் வடிவத்தில் ஒவ்வொரு
கடையிலும் நாம் காண்கிறோம். அவரது கனவானது உயிருள்ளதாக மற்றும் இன்னும் சிறப்பாக
இருப்பதற்கு அவைகள் சாட்சியங்களாக திகழ்கின்றன. சிறிய மற்றும் குறு அளவிலான
தொழில்நிறுவனங்களை நடத்துகின்ற ஆண் மற்றும் பெண் தொழில்முனைவோர்களை
ஊக்குவிப்பதற்காக மறைந்த திரு. ஆர். சின்னிகிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்தப்படும்
ஒரு
மரியாதை கலந்த அஞ்சலியாக, கவின்கேர்
இந்த விருதை நிறுவியிருக்கிறது. 'சின்னிகிருஷ்ணன்
இனோவேஷன் விருது', புதுமையான செயல்பாட்டின் ஒட்டுமொத்த மதிப்பு மற்றும் அதன்
தனித்துவத்தன்மை, மக்களுக்கு அது வழங்கும் பலன்கள், தரமுயர்த்துவதற்கான
அதன் திறன்நிலை மற்றும் நிலைப்புத்தன்மை ஆகிய அம்சங்களின்மீது சிறப்பு
கவனம் செலுத்துகிறது. விருதுகளைப் பெற்றவர்களுக்கு ரூ. 1 இலட்சம்
ரொக்கப்பரிசுடன், வேறுபட்ட பல சிறப்பு தொழில் நுணுக்கங்களை உள்ளடக்கி
அவர்களது தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகளில் சிறந்த
ஆலோசனையும், வழிகாட்டலும் வழங்கப்படும்.
கவின்கேர் பிரைவேட் லிமிடெட்
குறித்து: கவின்கேர் நிறுவனம் தனி நபர் பராமரிப்பு, தொழில்முறை
பராமரிப்பு, பால், சிற்றுண்டி, உணவு வகைகள், குளிர்
பானங்கள் மற்றும் சலூன்கள் உள்ளிட்ட பல்வேறு துறையில் சிறந்து விளங்கி வருகிறது. இதன்
தயாரிப்புகளை பொறுத்தவரை ஷாம்பு (சிக், மீரா, கார்த்திகா
மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா & கார்த்திகா), தேங்காய்
எண்ணெய் (மீரா), தோல் கிரீம்கள் (பேரிவர் & ஸ்பின்ஸ்), டியோடரன்ட்; டால்க்
(ஸ்பின்ஸ்), ஊறுகாய் (ருச்சி & சின்னீஸ்)
மற்றும் ஸ்நாக்ஸ் (கார்டன்), ஹேர் கலர்கள்
(இண்டிகா), சில்லறை விற்பனை நிலையம் தயாரிப்புகள் (ராகா புரொபஷனல்), பானங்கள்
(மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), அழகு நிலையம்
(கிரீன் ட்ரெண்ட்ஸ் & லைம்லைட்) மற்றும் தனிப்பட்ட
பராமரிப்பு பொருட்கள் (பட்ஸ் மற்றும் பெர்ரி) ஆகியவை அடங்கும். 'புதுமைகளை
வளர்ப்பதன் மூலமும், ஆர்வமுள்ள மற்றும் மகிழ்ச்சியான
ஊழியர்கள் மூலமும் விருப்பமான பிராண்டுகளை உருவாக்குவதன் மூலமும் சிறப்பாக
வளருவோம்' என்ற அதன் நோக்கத்தை உறுதியாக நிலைநிறுத்தியதன்
அடிப்படையில் இந்நிறுவனம் சிறப்பான வெற்றியை அடைந்துள்ளது.
Madras Management Association
(மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன்) (MMA) குறித்து: 1956-ம் ஆண்டில்
நிறுவப்பட்ட மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (MMA), இன்று ஆல்
இந்தியா மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் அமைப்பின் (AIMA) மிகப்பெரிய
கிளை சங்கமாக இருக்கிறது. 'AIMA-ன் சிறந்த LMA விருது' என்பதனை 2016-17ஆம் ஆண்டு
உட்பட தொடர்ச்சியாக வென்றிருப்பதோடு கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதனை பெற்றிருக்கிறது.
2012-13-ம் ஆண்டுக்கான ‘நேஷனல்
எக்செலன்ஸ் விருதையும் இது வென்றிருக்கிறது. 60
ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாக மேலாண்மை நேர்த்தி என்ற குறிக்கோளைக் கொண்டு MMA
பணியாற்றிவருகிறது. தனது உறுப்பினர்களாக 8000-க்கும்
அதிகமான கார்பரேட் நிறுவனங்கள், தொழிலகங்கள், தொழில்முறை
நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் எக்ஸிகியூட்டிவ்களை
இதுகொண்டிருக்கிறது. உயர் நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களுக்கு கருத்தரங்குகள் உட்பட
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 750 எக்ஸிகியூட்டிவ் டெவலப்மெண்ட்
செயல்நடவடிக்கை நிகழ்வுகளைMMA நடத்துகிறது. இந்நிகழ்வுகளில்
மொத்தத்தில் 2,00,000 -க்கும் அதிகமான எண்ணிக்கையில் எக்ஸிகியூட்டிவ்கள்
மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கேற்று பயனடைந்திருக்கின்றனர்.
அகில இந்திய மேலாண்மை சங்கத்தோடு (AIMA) இணைந்த
மிகப்பெரிய சங்கமாக மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (MMA) இயங்கி
வருகிறது. 2021-22ஆம்
ஆண்டு உட்பட, தொடர்ச்சியாக 13 தடவைகள் இந்தியாவில் சிறந்த மேலாண்மை சங்கம் என AIMA - ஆல்
தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற பெருமை MMA -க்கு உரியது. ஆம்பூர், ஆத்தூர், ஈரோடு,
ஓசூர், நாமக்கல், சேலம், ஶ்ரீ சிட்டி, திருச்சி, புதுச்சேரி மற்றும் செங்கல்பட்டு
ஆகிய நகரங்களில் உள்ளூர் அளவிலான கிளைகளை MMA கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவன
தலைமை அலுவலர்கள் மட்டுமல்லாது, சென்னை
பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள், IIT மெட்ராஸ் மற்றும் கிரியா பல்கலைக்கழகத்தின்
இயக்குநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலர் ஆகியோரும் MMA-ன்
நிர்வாகக்குழுவில் உறுப்பினர்களாக அங்கம்
வகிக்கின்றனர்.