மொத்தப் பக்கக்காட்சிகள்

தமிழ்நாட்டில் மங்களகரமான நாள்களில் பத்திர பதிவு செய்ய அனுமதி

 

தமிழ்நாட்டில் மங்களகரமான நாள்களில் பத்திர பதிவு செய்ய அனுமதி அளிக்கபபட்டுள்ளது. அதன்படி, பத்திர பதிவு அலுவலங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:

 

*பதிவுத் துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில், சித்திரை முதல் தேதி (ஏப்ரல் 14, 2021) , ஆடிப்பெருக்கு (03.08 .2021) மற்றும் தைப்பூசம் (18- 1- 2022) ஆகிய மங்களகரமான நாள்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது

 

Government Order 

மேலும், மங்களகரமான நாள்களில் பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய தினங்களில் பதிவு அலுவலர்கள் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாள்களில் மேற்கொள்ளப்படும்  பதிவுகளுக்கு பதிவு சான்றிதழ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் கோரிக்கை வந்தது.

 

இதன் அடிப்படையில், சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு  மற்றும் தைப்பூசம்  ஆகிய மங்களகரமான நாள்களில் பதிவினை மேற்கொள்ளும் மற்றும் அந்த நாள்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதியும் வழங்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...