🦉ஜனவரி 8-ம் தேதி உலக தட்டச்சு தினமாக (World Typing Day) கொண்டாடப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப உலகில் தட்டச்சு என்பது தவிர்க்க முடியாத ஒரு கலையாக மாறிவிட்டதென்னவோ நிஜம்.
எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
தட்டச்சு இயந்திரமனாது 1868 ஆம் ஆண்டு கிறிஸ்டோஃபர் லாதம் ஷோல்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஷோல்ஸ் ஒரு பத்திரிகையாளர். பதிப்பாளரும் கூட. டைப்ரைட்டர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த இயந்திரத்தில் QWERTY கீபோர்டு லேஅவுட் தான் இருக்கிறது. QWERTY என்பது தட்டச்சு இயந்திரத்தின் கீபோர்டில் உள்ள முதல் 6 எழுத்துகளில் வரிசை. இது கீபோர்டின் இடதுபுறத்தின் மேலிருந்து ஆரம்பிக்கும்.
1880 ஆம் ஆண்டு தொடங்கியே டைப்ரைட்டர் இயந்திரத்தை பழம்பெரும் எழுத்தாளர்கள் பலரும் பயன்படுத்தியுள்ளனர். மார்க் ட்வைன், எர்னெஸ்ட் ஹெம்மிங்வே, இயன் ஃப்ளெமிங் என பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எழுத்தாளர்கள் மட்டும் தான் இந்த இயத்திரத்தைப் பயன்படுத்தினார்களா? என்றால் இல்லை. அரசு அதிகாரிகளுக்கு இது தவிர்க்க முடியாத இயந்திரமானது. காலம் செல்ல காலம் டைப்ரைட்ட இயந்திரமும் நவீனமானது. சிறியதாக அழகாக எளிதாகக் கையாளக்கூடியதாக ஆனது. இதனால் அதன் திறனும், வேகமும், துல்லியமும் அதிகரித்தது.
1935 ஆம் ஆண்டில், முதல் எலக்ட்ரிக் டைப்ரைட்டரை ஐபிஎம் உருவாக்கியது. 1964 ஆம் ஆண்டு அந்த எலக்ட்ரிக் டைப்ரைட்டர் இயந்திரத்தில் இன்னும் சில அம்சங்களைச் சேர்த்தது ஐபிஎம். அது தான் உலகின் முதல் வார்ட் ப்ராசஸர் ஆனது. 1980ல், டைப்ரைட்டர் இயந்திரத்தை மெல்ல மெல்ல கணினி இயந்திரம் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. இருப்பினும் டைப்ரைட்டர் இயந்திரம் தொடர்ந்து இன்றளவும் பலராலும் பரவலாக விரும்பப்படும் இயந்திரமாக இருக்கிறது.
எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
தட்டச்சு இயந்திரமனாது 1868 ஆம் ஆண்டு கிறிஸ்டோஃபர் லாதம் ஷோல்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஷோல்ஸ் ஒரு பத்திரிகையாளர். பதிப்பாளரும் கூட. டைப்ரைட்டர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த இயந்திரத்தில் QWERTY கீபோர்டு லேஅவுட் தான் இருக்கிறது. QWERTY என்பது தட்டச்சு இயந்திரத்தின் கீபோர்டில் உள்ள முதல் 6 எழுத்துகளில் வரிசை. இது கீபோர்டின் இடதுபுறத்தின் மேலிருந்து ஆரம்பிக்கும்.
1880 ஆம் ஆண்டு தொடங்கியே டைப்ரைட்டர் இயந்திரத்தை பழம்பெரும் எழுத்தாளர்கள் பலரும் பயன்படுத்தியுள்ளனர். மார்க் ட்வைன், எர்னெஸ்ட் ஹெம்மிங்வே, இயன் ஃப்ளெமிங் என பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எழுத்தாளர்கள் மட்டும் தான் இந்த இயத்திரத்தைப் பயன்படுத்தினார்களா? என்றால் இல்லை. அரசு அதிகாரிகளுக்கு இது தவிர்க்க முடியாத இயந்திரமானது. காலம் செல்ல காலம் டைப்ரைட்ட இயந்திரமும் நவீனமானது. சிறியதாக அழகாக எளிதாகக் கையாளக்கூடியதாக ஆனது. இதனால் அதன் திறனும், வேகமும், துல்லியமும் அதிகரித்தது.
1935 ஆம் ஆண்டில், முதல் எலக்ட்ரிக் டைப்ரைட்டரை ஐபிஎம் உருவாக்கியது. 1964 ஆம் ஆண்டு அந்த எலக்ட்ரிக் டைப்ரைட்டர் இயந்திரத்தில் இன்னும் சில அம்சங்களைச் சேர்த்தது ஐபிஎம். அது தான் உலகின் முதல் வார்ட் ப்ராசஸர் ஆனது. 1980ல், டைப்ரைட்டர் இயந்திரத்தை மெல்ல மெல்ல கணினி இயந்திரம் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. இருப்பினும் டைப்ரைட்டர் இயந்திரம் தொடர்ந்து இன்றளவும் பலராலும் பரவலாக விரும்பப்படும் இயந்திரமாக இருக்கிறது.
வாட்ஸ் அப்பில் வந்தது