மொத்தப் பக்கக்காட்சிகள்

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் சர்வதேச சந்தைகளிலிருந்து சமூக பத்திரங்கள் மூலம் 475 மில்லியன் டாலர் திரட்டியது

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனி, சர்வதேச கடன் பத்திரச் சந்தைகளிலிருந்து சமூக பத்திரங்கள் வெளியீடு  மூலம் 475 மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டியது

மும்பைஜனவரி 12, 2021: 

இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனி (Shriram Transport Finance Company - STFC) ஸ்ரீராம் குழுமத்தின் ஓர் அங்கம் ஆகும். இந்த நிறுவனம், 4.15% வட்டி விகிதத்தில் 3.5 வருட முதலீடுக் காலத்தை கொண்ட நிலையான வட்டி விகித பாதுகாப்பான (Fixed Rate Senior Secured 144A)  கடன் பத்திரங்களை (Bond) (நிதி ஆண்டு 2021-22 -க்கு கிடைக்கும் வெளிநாட்டில் கடன் வாங்கும் - ECB வரம்பு) 475 மில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்புக்கு வெற்றிகரமாக  திரட்டி உள்ளதுஇ.சி.பி வழிமுறைகளில் கொண்டு வரப்பட்ட தளர்வுக்குப் பிறகு இந்த நிறுவனம் வெற்றிகரமான அமெரிக்கன் டாலர் மதிப்பிலான 7-வது வெளியீட்டை மேற்கொண்டுள்ளது.

சமூகப் பத்திரங்கள் (Social Bond) வெளியீடு மூலம் கிடைக்கும் தொகையை எஸ்.டி.எஃப்.சி  நிறுவனம், குறுசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) நிதி உதவி அளிக்கிறது. இந்தத் தொகையை அந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காகப் பயன்படுத்தும். எஸ்.டி.எஃப்.சி நிறுவனத்தின் சமூகப் பத்திர வெளியீடு என்பது எஸ்.டி.எஃப்.சியின் சமூக நிதிக் கட்டமைப்பால் வழிநடத்தப்படுகிறது. இது ஐ.சி.எம்.ஏ சமூகப் பத்திரக்  (ICMA Social Bond) கோட்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனியின் 
துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திருஉமேஷ் ரேவங்கர்

மார்னிங் ஸ்டார் குழுமத்தை சேர்ந்த சஸ்டைனலிடிக்ஸ் (Sustainalytics) நிறுவனத்திடமிருந்து இரண்டாவது தரப்பு கருத்தை எஸ்.டி.எஃப்.சி பெற்றுள்ளது. இது சமூகப் பிணைப்பு கட்டமைப்பை "நம்பகமானது மற்றும் தாக்கமானதுஎன்று விவரிக்கிறது மற்றும் கே.பி.எம்.ஜி (KPMG) நிறுவனத்தின் இன்டிபென்டன்ட் லிமிடெட் அஷ்யூரன்ஸ் அறிக்கையிலிருந்தும் (Independent Limited Assurance Report ) கருத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவனம், ஹாங்காங்சிங்கப்பூர்லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற உலகெங்கிலும் உள்ள சமூகப் பத்திரங்களில் ஆர்வத்துடன் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை கொண்டுள்ளது.

வலுவான முதலீட்டாளர் ஆர்வத்தின் பின்னணியில்சுமார் 4.45% ஆரம்ப வட்டிவழிகாட்டுதலுடன் பரிவர்த்தனை தொடங்கப்பட்டதுஉயர்தர நீண்ட கால முதலீட்டாளர்களால் ஆதரிக்கப்படும் வலுவான ஏல முறை தொடர்ந்தால்நிறுவனத்தால் விலையை 0.30% குறைந்து 4.15% வரை இறக்க முடிந்ததுஇந்தக் கடன்  பத்திரம் முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. நிறைவு நாளில் 2.5 மடங்குக்கு  அதிகமாக  விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த பரிவர்த்தனை ஆசியாவிலிருந்து 66%, ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, மற்றும் ஆப்ரிக்கா (EMEA - Europe, Middle East, and Africa) -லிருந்து 18% மற்றும் அமெரிக்காவிலிருந்து 16%  வந்தது. இன்சூரன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட சொத்து மேலாளர்களிடமிருந்து 93% முதலீடுவங்கிகளிடமிருந்து 4% மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் பிறவற்றிலிருந்து 3% முதலீட்டாளர்களின் பங்கேற்பைக் கொண்டிருந்ததுசிட்டிகுரூப், டாயிஷ் பேங்க்ஹெச்.எஸ்.பி.சிஜே.பிமார்கன் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க் ஆகியவை இணை  உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்களாகவும்இணை வெளியீட்டு நிறுவனங்களாகவும் செயல்பட்டனஆக்ஸிஸ் பேங்க், பார்க்ளேஸ்பி.என்.பி பரிபாஸ்கிரெடிட் சூஸே,  டி.பி.எஸ் பேங்க் லிமிடெட், எமிரேட்டீஸ் என்.பி.டி கேப்பிட்டல்எம்.யூ.எஃப்.ஜி மற்றும் எஸ்.எம்.பி.சி நிக்கோ ஆகியவை இந்தப் பரிவர்த்தனைக்கான இணை வெளியீட்டு நிறுவனங்களான செயல்பட்டன.


சமூகக் கடன் பத்திர வெளியீடு வெற்றிக்கரமாக நிறைவு பெற்றது குறித்துஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனியின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திருஉமேஷ் ரேவங்கர் (Mr. Umesh Revankar, Vice Chairman and MD of Shriram Transport Finance Company) கூறும் போது: “  எங்களின் எஸ்.டி.எஃப்.சி நிறுவனமானதுசேவை செய்யும் சமூகங்களை முன்னேற்றுவதற்கும் மேம்படுத்துவதற்கும்  நமது சுற்றுச்சூழல் அமைப்பிற்கு சமமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் உறுதிபூண்டிருக்கிறதுதொற்றுநோய் பரவல் என்பது  அடிப்படை சமூகப் பிரச்னைகளை பெரிதாக்கியுள்ளது. சமூகப் பிணைப்புகளால் தீர்க்கப்படக்கூடிய சிறந்ததை மீண்டும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அதிகரித்துள்ளதுசமூகப் பத்திர முதலீட்டுத் தேவை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து நமது சமூகப் பத்திரங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் காட்டும் அதிக ஆர்வத்தைக் கண்டு எஸ்.டி.எஃப்.சி மகிழ்ச்சியடைகிறதுசமூகத் தாக்கம் சில கண்டிப்பான விலக்குகளுடன் நமது முன்னுரிமைத் துறையைப் போலவே உள்ளது.  பெரிய பெருக்கி விளைவுகளுடன் சமூகப் பொருளாதாரத் தேவைகளுக்கு நிதி உதவி அளிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்..” என்றார்.

     ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் பற்றி..!


ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (Shriram Transport; BSE: SRTRANSFIN, NSE: SRTRANSFIN) என்பது கடந்த 42 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஶ்ரீராம் குழுமத்தின் ஓர் நிறுவனம் ஆகும்.  இது வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் (NBFCs) மிகப் பெரிய சொத்து நிதி உதவி நிறுவனமாகும். 5 முதல் 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட  டிரக்கள் (pre-owned trucks) வாங்க நிதி உதவி அளிப்பதில் இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறை பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். 2021 செப்டம்பர் நிலவரப்படி இந்த நிறுவனத்தின் ஐந்தொகை மதிப்பு ரூ. 1.21 லட்சம் கோடியாகும். இந்தியா முழுக்க 1,825 கிளைகளைக் கொண்டிருக்கிறதுமேலும்இந்தியா முழுக்க 18,488 வணிக குழுவை கொண்ட 24,160   ஊழியர்களை கொண்ட நிறுவனமாகும்.  இந்த நிறுவனத்துக்கு 21 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிறுவனம் கடன் பெறுதல்,  பயன்படுத்தப்பட்ட டிரக்குகளின் மதிப்பீடு மற்றும் வசூல் ஆகிய துறைகளில் வலுவான திறன்களை கொண்டுள்ளதுஇது ஒருங்கிணைக்கப்பட்ட வணிக மாதிரியைக் கொண்டுள்ளது. பல கடன் திட்டங்களை வழங்குகிறது. பயன்படுத்தப்பட்ட வர்த்தக வாகனங்கள் வாங்க கடன், புதிய வர்த்தக வாகனங்கள் நிதி உதவி மற்றும் தற்செயலான பழுதுபார்க்கும் கடன்கள், டயர் கடன்கள் மற்றும் செயல்பாட்டு மூலதன கடன் போன்ற பிற கடன்களை வழங்கி வருகிறது.

 

 

 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...