உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்
மற்றும் கோட்டக் லைஃப் ஆகிய நிறுவனங்கள் லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்களை
ஊக்குவிக்க கூட்டு சேர்ந்திருப்பதை அறிவித்துள்ளனர்
வாடிக்கையாளர்களுக்கு கோட்டக் லைஃப்-இன் பல்வேறு
விரிவான நிதி பாதுகாப்பு தீர்வுகளை வழங்குவதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை இந்தக்
கூட்டாண்மை வலுப்படுத்துகிறது.
மும்பை / சென்னை, பிப்ரவரி 27, 2026: உத்கர்ஷ் ஸ்மால்
ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் (“உத்கர்ஷ் SFBL”) இன்று கோட்டக் மஹிந்திரா
லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (“கோட்டக் லைஃப்”) நிறுவனத்துடன் ஒரு மூலோபாய
கூட்டாண்மையை துவங்கியிருப்பதை அறிவித்துள்ளது. வங்கியின் தயாரிப்பு விரிவாக்க உத்தியில்
இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.
இந்த கூட்டு முயற்சியானது, உத்கர்ஷ் SFBL இன் லைஃப்
இன்சூரன்ஸ் பிரிவை மிகவும் வலுப்படுத்தி, 27 மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேசங்களை உள்ளடக்கிய வங்கியின் 1105 பேங்கிங் அவுட்லெட்களில் கோட்டக்
லைஃப்-இன் விரிவான தயாரிப்புகளின் தொகுப்பை ஒருங்கிணைக்கிறது.,
இந்த கூட்டாண்மை, உத்கர்ஷ் SFBL இன் 51.4 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு
கோட்டக் லைஃப் வழங்கும் பாதுகாப்பு, சேமிப்பு, யூனிட்-லின்க்டு மற்றும் ஓய்வுகால
திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரத்தியேக லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்களையும்
தீர்வுகளையும் வழங்கி, அவர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.,
இந்தக் கூட்டாண்மை குறித்துப் பேசிய உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்
லிமிடெடின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO திரு. கோவிந்த் சிங் அவர்கள், “இந்தக்
கூட்டாண்மை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான
எங்களின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. கோட்டக் லைஃப் இன்சூரன்ஸ்
நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், முன்னணி காப்பீட்டு நிறுவனங்களின்
பரந்த அளவிலான லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்களை அணுகுவதற்கான ஒரு வலுவான தளத்தை
நாங்கள் உருவாக்குகிறோம். இது எங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களின் தனிப்பட்ட
தேவைகள், விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை நிலைகளுக்கு மிகவும் பொருத்தமான தீர்வுகளை
தேர்வு செய்துகொள்ள உதவுகிறது மட்டுமன்றி, அவர்களின் தனித்துவமான தேவைகள் மற்றும்
நிதி இலக்குகளுக்கு மிகவும் பொருத்தமான நிதி பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.
கோட்டக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெடின் நிர்வாக இயக்குநர்
மகேஷ் பாலசுப்பிரமணியன் கூறுகையில், "கோட்டக் லைஃப் நிறுவனத்தில், லைஃப்
இன்சூரன்ஸ் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அவசியமான ஒன்று என நாங்கள் உறுதியாக
நம்புகிறோம். IRDAI இன் 'அனைவருக்கும் காப்பீடு' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு
நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் உடனான
எங்களின் கூட்டு முயற்சி அந்த திசையை நோக்கிய ஒரு படியாகும். இந்தக்
கூட்டாண்மையின் மூலம், உத்கர்ஷ் SFBL இன் வாடிக்கையாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை
வழங்க வங்கியின் வாடிக்கையாளர் நெட்வொர்க்கையும் எங்களின் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணத்துவத்தையும்
பயன்படுத்தி, அணுகப்படாத மக்களுக்கு எங்களின் சேவைகளை விரிவுபடுத்துவதையே நாங்கள்
நோக்கமாகக் கொண்டுள்ளோம்."
இந்தக் கூட்டாண்மை, உத்கர்ஷ் SFBL இன் வாடிக்கையாளர்கள் பரந்த
அளவிலான லைஃப் இன்சூரன்ஸ் சலுகைகளைப் பெற உதவும். இவற்றை கிளைகள், இணைய
வங்கி, மொபைல் வங்கி, UPI மற்றும் அசிஸ்டட்-டிஜிட்டல் தளங்கள் போன்ற
பல வழிகள் மூலம் வழங்க முடியும்.
கோட்டக் லைஃப் நிறுவனம் 5 கோடிக்கும் மேற்பட்ட உயிர்களைப்
பாதுகாத்துள்ளது*, இது பாலிசிதாரர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதில்
அதன் நிலையான சாதனைப் பதிவைப் பிரதிபலிக்கிறது. இந்த உத்தரவாதம் இப்போது
உத்கர்ஷ் SFBL இன் வாடிக்கையாளர்களுக்கும் நீட்டிக்கப்படும்
