ஜி ஸ்கொயர் நிறுவனம் வட சென்னையில் ரூ.230 கோடி முதலிலீட்டில், அனைத்து வசதிகளுடன் உடனே வீடு கட்டி
குடியேற 62.38 ஏக்கரில்
1,091 வில்லா வீட்டு மனைகள் அறிமுகம் செய்யவுள்ளது
~ அதிநவீன உள்கட்டமைப்பு, சிறந்த போக்குவரத்து வசதிகள் மற்றும் பெரிய அளவிலான மேம்பாட்டு திட்டங்களால் வட சென்னையில்
விஸ்வரூப வளர்ச்சி அடைந்து வரும் ரியல் எஸ்டேட் துறை ~
சென்னை, ஜூன் 18
2025: இந்தியாவின் வீட்டு மனை மற்றும் வணிக மேம்பாட்டு
திட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாக திகழும் ஜி ஸ்கொயர், ரெட் ஹில்ஸ், புழல் மற்றும்
காரனோடை உள்ளிட்ட பகுதிகளில் உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் 1,091 வில்லா
பிளாட்களை உருவாக்க மொத்தம் 62.38 ஏக்கர்
நிலத்தை கையகப்படுத்துவதன் மூலம் வட சென்னையில் ரியல் எஸ்டேட் துறையின் சிறப்பான
வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இந்த திட்டங்களுக்காக ஜி ஸ்கொயர் நிறுவனம் 230 கோடி
ரூபாயை முதலீடு செய்துள்ளது.
ஒரு காலத்தில் தொழில்துறை வளர்ச்சி மட்டுமே அடைந்ததாக
கருதப்பட்ட வடசென்னை, இப்போது
வீட்டு மனை துறையில் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்னை வெளிவட்டச் சாலை
போன்ற முக்கிய போக்குவரத்து மேம்பாடுகள் முதல் மெட்ரோ ரயில், பள்ளிகள், கல்லூரிகள்
மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட சமூக உள்கட்டமைப்புகளின் விரிவாக்கம் வரை, இந்தப் பகுதி
அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் அனைத்து
வசதிகளுடன், பாதுகாப்பான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட வீட்டு
மனைகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வீட்டு மனைகள் திட்டத்திற்கு 230
கோடி ரூபாயை ஜி ஸ்கொயர் முதலீடு செய்துள்ளது.
இதன் புதிய திட்டங்கள் முக்கிய போக்குவரத்து
வழித்தடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மிக அருகில்
அமைந்துள்ளன. மாதவரம்
மொஃபுசில் பேருந்து நிலையம். (MMBT), மாதவரத்தில் உள்ள ஃபின்டெக் சிட்டி, பொன்னேரி
அருகே மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியின் தோற்றம், சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு போன்ற
பிற வளர்ச்சிகள் இந்த புதிய வீட்டுமனை
திட்டங்கள் அருகில் உள்ளது. பிளக்-அண்ட்-ப்ளே உள்கட்டமைப்புடன், இந்த மனைகள்
எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் சூழலில் தங்கள் கனவு வீடுகளைக் கட்ட
விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இது குறித்து ஜி ஸ்கொயர்
ரியல்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், ஒரு
காலத்தில் புறக்கணிக்கப்பட்ட வட சென்னை தற்போது அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது.
உள்கட்டமைப்பு, சிறந்த போக்குவரத்து வசதி என பல்வேறு துறைகளிலும் நல்ல
வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்கான தேவைகளும்
இங்கு அதிகரித்துள்ளது. அதை பூர்த்தி செய்யும் விதமாக எங்களின் வில்லா வீட்டு மனை
திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. முறையான ஆவணங்கள், ஒப்பிடமுடியாத
வசதிகளுடன் எங்களின் ஒவ்வொரு திட்டங்களும் ஒரு வீட்டை சொந்தமாக்கி கொள்ள
விரும்பும் ஒவ்வொருவரின் கனவையும் நனவாக்கும் லட்சியத் திட்டங்களாக உள்ளன. அந்த
திட்டங்கள் இந்தப் பகுதியிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன என்று
தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த
விரிவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் டவுன்ஷிப்கள், கட்டத்
தயாராக உள்ள மனைகள், தெரு விளக்குகளுடன் கூடிய தார்
சாலைகள், 24x7 சிசிடிவி கண்காணிப்பு, வாங்கிய பிறகு
கட்டுமான உதவி மற்றும் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தவணைமுறை வசதிகள் போன்ற
அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. மேலும் கூடுதலாக, இங்கு இடம்
வாங்குபவர்களுக்கு ஒரு வருட இலவச பராமரிப்பும் செய்து தரப்படும்.
நகரின் ஒவ்வொரு வளர்ச்சிப் பகுதியிலும் அனைத்து
வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட வீட்டு மனைகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின்
முக்கிய குறிக்கோளாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வட சென்னை போன்ற
வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளை கண்டறிந்து வீட்டு மனைகளை சரியான விலையில் சரியான
நேரத்தில் சொந்தமாக்கிக் கொள்ள உதவுகிறோம் என்றும் பால ராமஜெயம் தெரிவித்தார்.
இந்த வீட்டு மனைகள் வெளிப்படையான ஆவணங்கள், சிறந்த
பாதுகாப்பு மற்றும் தெளிவான உரிமைப் பத்திரங்கள் ஆகியவற்றின் காரணமாக பாதுகாப்பான
மற்றும் நம்பகமான முதலீட்டிற்கான சிறந்த இடங்களாகும். ஐடி பூங்காக்கள், தொழில்துறை
மண்டலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என வட சென்னை வேகமாக முன்னேறி வருவதால், ஜி ஸ்கொயரின்
இந்த புதிய திட்டங்கள் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை கவரும்
வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.