டாப் 15 நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிஃப்டி டாப் 15 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட்..!
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனம், அறிமுகம் செய்திருக்கும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிஃப்டி டாப் 15 ஈக்குவல்
வெயிட் இடிஎஃப் & ஐசிஐசிஐ புரூடென்ஷியல்
நிஃப்டி டாப் 15 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட்
என்எஃப்ஓ காலம்: ஜூன் 10,
2022 முதல் ஜூன் 24, 2025 வரை
சிறப்பம்சங்கள்:
நமது நாட்டின் முதன்மையான 15
மிகப் பெரிய நிறுவனங்களில் மட்டும் முதலீட்டை மேற்கொள்ளும்.
ஒரே அளவிலான முதலீட்டுத் தொகையை
அனைத்து நிறுவனங்களிலும் பிரித்து முதலீடு செய்யும். குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளில்
கூடுதல் முதலீடு செய்வது இதனால் தவிர்க்கப்படும்.
நிதித் துறை, ஆட்டோமொபைல், எஃப்எம்சிஜி,
தகவல் தொழில்நுட்பத் துறை என்று பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் பிரித்து முதலீடு
மேற்கொள்ளப்படும்.
வெளிப்படைத் தன்மை மற்றும் விதிமுறை
சார்ந்த முதலீடு. பாஸிவ் திட்டம் ஆதலால் நிர்வாக செலவு குறைவு.
ஐசிஐசிஐ
புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிஃப்டி டாப்
15 ஈக்குவல் வெயிட் இடிஎஃப் (ICICI
Prudential Nifty top 15 Equal Weight ETF)
& ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிஃப்டி டாப் 15 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட்
(ICICI Prudential Nifty top 15 Equal Weight Index Fund) என்ற பெயர்களில் நிஃப்டி
50 நிறுவனங்களில் அதிக மதிப்பு கொண்ட 15 நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டங்களை
அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஜூன் 10 முதல் ஜூன் 24 வரை முதலீட்டை
மேற்கொள்ளலாம். இந்தத் திட்டம் நிஃப்டி டாப் 15 ஈக்குவல் வெயிட் குறியீட்டை பிரதி எடுத்து முதலீடு செய்யும் ஓப்பன்
என்டெட் வகை திட்டமாகும். தேர்ந்தெடுக்கப்படும் 15 நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும்
மதிப்பீடு செய்யப்பட்டு இந்தக் குறியீடு மறுசமநிலை படுத்தப்படும். நிதி துறை, ஆட்டோமொபைல்,
எஃப்எம்சிஜி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டெலிகாம் துறை சார்ந்த முதன்மையான நிறுவனங்களில்
பிரித்து முதலீடு மேற்கொள்ளப்படும். ஒரே அளவிலான முதலீட்டுத் தொகையை அனைத்து நிறுவனங்களிலும்
பிரித்து முதலீடு செய்யப்படுவதால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளில் கூடுதல் முதலீடு
செய்வது தவிர்க்கப்பட்டு நமது நாட்டின் வளர்ச்சியில் அங்கம் வகிக்கும் முதன்மையான நிறுவனங்களில்
சரி விகித முதலீடு மேற்கொள்ளப்படும்.
இந்தப் புதிய ஃபண்ட் வாயிலாக
முதலீட்டாளர்கள் நமது நாட்டின் மிக மதிப்புமிக்க முதன்மையான நிறுவனங்களில் சுலபமாக
மற்றும் குறைந்த செலவில் முதலீடு செய்ய முடியும் என்று ஐசிஐசிஐ புரூடென்சியல் மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் & டிஜிட்டல் பிசினஸ் அதிகாரி அபிஜித்
ஷா தெரிவித்துள்ளார். சரி விகித அளவிலான முதலீடுகள் அனைத்து நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுவதால்
குறிப்பிட்ட பங்கு அல்லது துறை சார்ந்த சார்பு நிலை தவிர்க்கப்படுகிறது. இது நிலைத்தன்மை
மற்றும் முதலீட்டு பரவலாக்கத்தை விரும்பும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிஃப்டி டாப் 15 ஈக்குவல் வெயிட் குறியீட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
நமது நாட்டில் உள்ள முதன்மையான
15 ப்ளூசிப் நிறுவனங்களில் சரி விகிதத்தில் முதலீடு மேற்கொள்ளப்படும். சிறப்பாக செயல்படும்
பல்வேறு துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யப்படும். கடந்த காலங்களில்
நிஃப்டி 50 குறியீட்டை காட்டிலும் நீண்ட கால நோக்கில் நிஃப்டி டாப் 15 ஈக்குவல் வெயிட்
குறியீடு அதிக வருமானத்தை அளித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் டாப் 15 நிறுவனங்கள்
ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் விதிமுறை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு இந்தக்
குறியீடு மறு சமநிலைப்படுத்தப்படும்.
இந்தக் குறியீட்டில் நிறுவனங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன?
வெளிப்படைத்தன்மை மற்றும் விதிமுறை
சார்ந்து கடந்த ஆறு மாத கால சராசரி பங்குச் சந்தை மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு டாப்
15 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் நிறுவனங்களின் சந்தை
மூலதனம் கணக்கீடு செய்யப்பட்டு அந்தக் காலாண்டில் அதிக பங்குச் சந்தை மதிப்பு கொண்ட
15 நிறுவனங்கள் மட்டும் இந்தக் குறியீட்டில் இடம் பிடிக்கும். இதன் காரணமாக நமது நாட்டின்
தற்போதைய நிலவரப்படி உள்ள முதன்மையான 15 நிறுவனங்கள் மட்டுமே இந்தக் குறியீட்டில் இடம்
பிடிக்கும்.
கடந்த காலங்களில் நிஃப்டி 50
TRI குறியீட்டை காட்டிலும் நீண்ட காலத்தில் நிஃப்டி டாப் 15 ஈக்குவல் வெயிட் குறியீடு
அதிக வருமானத்தை அளித்துள்ளது. சம அளவில் முதன்மையான பல்வேறு துறை சார்ந்த 15 லார்ஜ்
கேப் பங்குகளில் முதலீடு செய்யப்படுவதே இந்தக் குறியீடு அதிக வருமானம் கொடுப்பதற்கு
காரணமாக உள்ளது.
பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கங்களை
சந்தித்த கால கட்டத்திலும் நிஃப்டி டாப் 15 ஈக்குவல் வெயிட் குறியீடு அதிக வருமானத்தை
அளித்துள்ளது. எந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கிலும் கூடுதலாக முதலீடு செய்யாமல்
சரிவிகிதத்தில் அனைத்து நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்படுவது கூடுதல் லாபத்திற்கு
காரணமாக இருந்துள்ளது.
மதிப்பீடு:
மே 29, 2025 படி நிஃப்டி டாப்
15 ஈக்குவல் வெயிட் குறியீடு அதன் கடந்த மூன்று ஆண்டு கால பங்கு விலை / வருமான விகிதத்தை
(P/E Ratio) விட குறைவான மதிப்பில் வர்த்தகமாகி வருகிறது. குறைந்த மதிப்பீட்டில் நீண்ட
கால நோக்கில் வலுவான பங்குகளில் முதலீடு செய்வதற்கு தோதான நேரத்தில் இந்தத் திட்டம்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திட்ட விவரங்கள்:
⦁
திட்டத்தின் பெயர் - ஐசிஐசிஐ புரூடென்ஷியல்
நிஃப்டி டாப் 15 ஈக்குவல் வெயிட் இடிஎஃப் & ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிஃப்டி டாப்
15 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட்
⦁ என்எஃப்ஓ காலம்: ஜூன் 10 முதல் ஜூன் 24 வரை
⦁ வருமான மதிப்பீட்டு குறியீடு: நிஃப்டி டாப் 15 ஈக்குவல் வெயிட்
TRI
⦁
ஃபண்ட் மேனேஜர்கள்: திரு. நிஷித் பட்டேல் & திருமதி.
அஸ்வினி ஷிண்டே
⦁
குறைந்தபட்ச முதலீடு: ₹1,000/- ( ரூ. 1-ன் மடங்குகள்)
⦁
திட்ட வகைகள் (இண்டெக்ஸ் ஃபண்ட்): ரெகுலர்
& டைரக்ட்; குரோத் & டிவிடெண்ட்
(IDCW)
⦁
என்எஃப்ஓ வெளியீட்டுக்கு பிறகு கூடுதல் முதலீடு:
முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் 1 யூனிட் என்ற மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும்
வாங்க முடியும்.
⦁ மறு சமநிலைபடுத்துதல்
(Rebalancing) & மறு சீரமைப்பு (Reconstitution): இந்தக் குறியீட்டில் ஒவ்வொரு
காலாண்டு முடிவிலும் மறு சமநிலை படுத்தப்படும்,
ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மறுசீரமைப்பு நடைபெறும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு
தொடர்பு கொள்ளவும்.
திரு. சிவகாசி மணிகண்டன்
நிறுவனர்,
+ 91 98405 77675
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
நாணயம் விகடன் வெளியாகி உள்ள திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
தலைமை அலுவலகம்
சிவகாசி மணிகண்டன், MBA
(F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing
Director - AISMONEY
No.
21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet - 632 513
Ranipet Dt. TN, India.
+ 91 98405 77675
+ 91 96777 66393 (Office)
support@aismoney.com
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.