தங்க நகை மதிப்பில் 75% மட்டுமே கடன்… ரிசர்வ் வங்கி அதிரடி..! RBI Gold Loan
தங்க நகைக்கடன் பெற கடும் கட்டுப்பாடுகளை வரைவாக பாரத ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. அதன்படி தங்கத்தின் மதிப்பில் 75% மட்டுமே கடனாக வழங்கப்படும்.
அடமானம் வைக்கும்போது நகைக்கு உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும். வெள்ளிப் பொருட்களையும் அடகு வைத்து கடன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தேவைக்கு உதவும் பொருள்:
தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்கள் தங்கத்தை ஆடம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. தங்களது அவசர தேவைக்கு உதவும் பொருளாகவும் பார்க்கிறார்கள்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கு ஏற் படும் உடனடி பணத்தே வைக்கு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்தே பணத்தை பெற்று வந்தனர். தனியார் நடத்தும் அடகு கடைகளில் வட்டி அதிகம் என்பதால் பெரும்பாலானவர்கள் வங்கிகளிலேயே தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வந்தனர்.
நடுத்தர மக்களுக்கு பாதிப்பு:
இந்தs சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாடு ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதித்து வருகிறது. முன்பெல்லாம். வங்கிகளில் நகைகளை அட மானம் வைத்தால், குறித்த
காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடகு வைத்துக் கொள்ளலாம்.
தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின்னர். இந்த முறை முற்றிலும் மாறியது. குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும். இந்தக் கட்டுப்பாடு அனைத்து தரப்பினரையும் பெருமளவு பாதித்தது.
புதிய கட்டுப்பாடுகள்..
இந்தச் சூழ்நிலையில்ள் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக, நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய் துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் & தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத் திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளி யிட்டுள்ளது.
அதில் பல அம்சங்கள் முன் மொழியப்பட்டுள் ளன.
அதன் விவரம் வறுமாறு:-
75% மட்டுமே கடன்
1 தங்கத்தின் மதிப்பில் 75 - சதவீதம் மட்டுமே கடன் - வழங்க வேண்டும். தற்போது 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. அதாவது ஒருலட்சம் - மதிப்புள்ள தங்கத்திற்கு அதிக 3 பட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்கப்படும்.
2 தங்க நகையை அடமா னம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.
3 வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறு திப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.
3 தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும்.
4 தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.
5 ஒரு நபருக்கு அதிகபட்ச மாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும்.
6 தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படை யாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிடவேண்டும்.
7 தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந் தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
8 கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 வேலை நாட்களுக்கு தங்கத்தை திருப்பிதர வேண்டும். தாமதம் ஏற்பட்டால், அதற்கு ஈடாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 செலுத்த வேண் டும்.