தொலைநோக்கு பார்வை 2025 - 2027: புதிய தலைவர் ஹபீப் தலைமையில் புதிய இலக்கை நோக்கி பயணிக்கும் கிரெடாய்
தமிழ்நாடு
--------
~ ரியல் எஸ்டேட் வணிகத்தை எளிதாக்க பேர்ப்ரோ கண்காட்சியை துபாய், அபுதாபி, மஸ்கட், ரியாத், தோஹா மற்றும் சிங்கப்பூர் கொண்டு
செல்ல திட்டம்~
சென்னை, 21 மே 2025- கிரெடாய் தமிழ்நாடு மண்டலம், புதிய தலைவர் ஹபீப் தலைமையில் தொலைநோக்கு
பார்வை 2025-2027 என்னும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும் வகையில் ரியல் எஸ்டேட்
துறையில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி
குறித்தும் மற்றும் தற்போதைய போக்குகள் குறித்தும் பத்திரிக்கையாளர்கள்
சந்திப்பின்போது கிரெடாய் தமிழ்நாடு
தலைவரும், ஆர்டபிள்யூடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான
டபிள்யூ.எஸ். ஹபீப் கூறுகையில், ரியல் எஸ்டேட் என்பது கட்டிடங்களை
சார்ந்தது மட்டுமல்ல; இது வேலைவாய்ப்பு, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாகும். இதன்
நடைமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு
வாங்குபவர்கள் இடையே மதிப்புமிக்க உறவை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் ஹபீப் கூறுகையில், ரியல் எஸ்டேட் வணிகத்தை எளிதாக்குவது, மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும்
காலக்கெடுவுடன் கூடிய ஒழுங்குமுறை வழிமுறைகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
கிரெடாய் தமிழ்நாட்டின் முக்கிய நோக்கம், மாநிலம் முழுவதும் உள்ள 135
முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களுக்கான முதன்மை திட்டங்களை சரியான நேரத்தில்
செயல்படுத்துவதாகும்.
இந்தத் திட்டங்கள் என்பது வெறும் நிர்வாக ஆவணங்கள்
மட்டுமல்ல; அவை நிலையான, சிறப்பான நகர்ப்புற எதிர்காலத்திற்கான வரைபடங்கள்
ஆகும். அவை திட்டமிட்ட வளர்ச்சிக்கான அரசின் தொலைநோக்குப் பார்வையை
பிரதிபலிக்கிறது.
மாநிலம் முழுவதும் எங்கள் செயல்பாட்டை கொண்டு
செல்லும் வகையில் கிரெடாய் தமிழ்நாடு விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போதுள்ள 10
மண்டலங்களுடன், சிவகங்கை, வேலூர், கரூர், நீலகிரி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட வளர்ச்சி அடைந்து வரும் 5 முதல் 6
மண்டலங்களை இணைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது மாநில வளர்ச்சியில்
முக்கியத்துவம் பெறும்.
அத்துடன் பேர்ப்ரோ
கண்காட்சியை துபாய், அபுதாபி, மஸ்கட், ரியாத், தோஹா மற்றும் சிங்கப்பூர்ரில் ஆண்டுதோறும் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இது
வெளிநாடுவாழ் இந்தியர்களை முதலீடு செய்யத் தூண்டுவதோடு, உலக அரங்கில் தமிழ்நாட்டின் ரியல்
எஸ்டேட் துறையை முன்னிலைப்படுத்தும்.
தமிழ்நாட்டின் நகர்ப்புற மற்றும் பொருளாதார
மாற்றத்தில் ரியல் எஸ்டேட் துறையை ஒரு முக்கிய துறையாக நிலைநிறுத்தி, நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் குறைந்த
விலை வீடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளோம். மேலும் எங்களது எதிர்காலப் பயணம், வலுவான அரசு - தொழில்துறை
ஒத்துழைப்பு, தொலைநோக்குத் திட்டமிடல் மற்றும் நவீன முறையில் மக்கள் வாழ்வதற்கு தகுந்த
வாழ்விடங்களை வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் கட்டமைப்பது ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.
கிரெடாய் தமிழ்நாடு என்பது மாநிலத்தில் உள்ள தனியார்
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கும் உச்சபட்ச அமைப்பு ஆகும். இது
தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் டபிள்யூ.எஸ். ஹபீப் தலைமையில்
சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அமைப்பின் 2025-2027-ம்
ஆண்டிற்கான தொலைநோக்குப் பார்வையானது, தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட்
துறையின் வளர்ச்சிக்கான தமிழ்நாடு அரசின் எதிர்பார்ப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட்
சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதையும் மாநிலத்தின் 1 டிரில்லியன் டாலர்
பொருளாதார தொலைநோக்குப் பார்வைக்கு தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்குவதையும்
நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.