மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளத்தின் போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 500 பயணிகளுக்கு சேவை புதுக்குடி மேலூர் மக்களுக்கு விருது

அலர்ட் பியிங் விருது வழங்கும் விழா:

நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் விருது வழங்கி கவுரவிப்பு

 

ரத்தன் டாடாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

 

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரை காப்பாற்றிய 'ரேட் ஹோல் வீரர்களுக்கு' அலர்ட் பியிங் ஐகான் விருது வழங்கப்பட்டது.

 

தூத்துக்குடி வெள்ளத்தின் போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை செய்ததற்காக புதுக்குடி மேலூர் மக்களுக்கு அலர்ட் பியிங் ஐகான் விருது

 

நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு ஆர்சேஷசாயி மற்றும் 
பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர் விருதுகளை வழங்கி கவுரவித்தனர்

 

சென்னைபிப். 9-

நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஹீரோக்களாக விளங்கியவர்கள் 'அலர்ட் பியிங்விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 7வது ஆண்டாக 'அலர்ட் பியிங்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அலர்ட் என்ற தன்னார்வ லாப நோக்கற்ற அமைப்பானதுஇந்தியாவில் 'வாழ்க்கை உரிமை'யை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன்விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்துஉயிரைக் காப்பாற்ற அல்லது பாதுகாக்க உதவிய கீழ்க்கண்ட தனிநபர்கள்நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என 13 நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு விருதுகளை வழங்கியது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அடையாறு புற்று நோய் மைய மற்றும் ஏஷியன் பெயிண்ட்ஸ் தலைவர் சேஷசாயி மற்றும் சென்னை இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீடாக்டர்மோகன் காமேஸ்வரன் ஆகியோர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

தனி நபர் பிரிவில் இந்த விருதுகள் தங்கள் உயிரை பணயம் வைத்த 5 நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு வழங்கப்பட்டது. வெள்ளத்தின் போது குழந்தையைப் பெற்றெடுக்க உதவிய தூத்துக்குடியைச் சேர்ந்த செவிலியர் ஜெயலட்சுமிக்குகடமையைத் தாண்டி பணியாற்றியதற்காக வழங்கப்பட்டதுநிறுவனங்களுக்கான பிரிவில்நிஜாம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் பார்  ஐசியூயுனைடெட் வே ஆப் சென்னைதாரா சன்ஸ்தான் மற்றும் தரணி ஜியோடெக் என்ஜினியர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவையும் விருதுகளைப் பெற்றன. அலர்ட் பியிங் ஐகான் விருது உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரை காப்பாற்றிய ரேட் ஹோல் வீரர்களுக்கும்தூத்துக்குடி வெள்ளத்தின் போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை செய்ததற்காக புதுக்குடி மேலூர் மக்களுக்கும் வழங்கப்பட்டது.

இதற்கான நடுவர்களாக நேச்சுரல் குரூப் சலூன்ஸ் நிறுவனர் வீணா குமாரவேல், தலைமை தகவல் ஆணையர்டிஜிபி (ஓய்வு) முகமது ஷகீல் அக்தர்ஆற்காடு இளவரசரின் வாரிசு மற்றும் திவான் நவாப்சாதா முகமது ஆசிப் அலி லைப்லைன் மருத்துவமனைகள் தலைவர் மற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எஸ்ராஜ்குமார், மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமார் மற்றும் தொழில் அதிபர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அலர்ட் அறங்காவலர் குழுவால் வழங்கப்பட்டவாழ்நாள் சாதனைக்கான அலர்ட் பியிங் விருதுவணிகத்தில் சிறந்து விளங்கியதற்காகவும்சிறப்பாக சமூகத் தொண்டாற்றியதற்காகவும் ரத்தன் என் டாடாவிற்கு வழங்கப்பட்டது.

இது குறித்து அலர்ட் தலைவர் மைக் முரளிதரன் கூறுகையில், நல்ல சமாரியன் சட்டம் அமலில் இருப்பதால்பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் எண்ணிக்கையை லட்சம் பேரிலிருந்து வரும் 2028-ம் ஆண்டுக்குள் கோடியாக உயர்த்த இருக்கிறோம்கொரோனா காலத்தில் பயிற்சியின் வேகம் குறைந்த போதிலும்கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற சமூகங்களைத் தவிரபள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவிடும் பயிற்சியை அளிப்பதன் மூலம்இப்போது அது மீண்டும் வேகம் எடுக்கத் துவங்கி உள்ளதுஇந்த தன்னார்வலர்களே எங்களின் பலம் என்று கூறிய அவர், அவசர காலங்களில்பெரும்பாலான மக்களுக்கு உதவ மனம் இருக்கிறதுஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லைவிலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற அவசரகாலத்தில் உதவுவதற்கு அதிகமான மக்களுக்கு பயிற்சி அளிப்பதே இதன் நோக்கம்கவனக்குறைவால் எந்த உயிரும் போகக்கூடாது என்று தெரிவித்தார்.

விருது பெற்றவர்கள் பற்றி நிறுவன அறங்காவலர் கலா பாலசுந்தரம் பேசுகையில், அலர்ட் பியிங் விருதுகளின் 7வது பதிப்புஇரக்கம் மற்றும் சேவையின் உணர்வை உள்ளடக்கிய நிஜ வாழ்க்கை ஹீரோக்களின் சிறப்பான செயல்பாட்டை குறிக்கும் விதமாக உள்ளதுஇந்த நிகழ்வின் மூலம்அவர்களின் தன்னலமற்ற செயல்களுக்கு மதிப்பளிப்பது மட்டுமல்லாமல்பரவலான விழிப்புணர்வு மற்றும் அவசரநிலைகளைக் கையாள்வதில் தயார்நிலையின் முக்கியமான தேவையை வலியுறுத்துகிறோம்.

அலர்ட் இணை நிறுவனரும்  நிர்வாக அறங்காவலருமான ராஜேஷ் ஆர் திரிவேதி பேசுகையில், இந்தியா முழுவதிலும் இருந்து ஒவ்வொன்றும் மிக அசாதாரண மற்றும் துணிச்சலான சம்பவங்களைக் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் எங்களுக்கு வரப்பெற்றனஅதில் குறிப்பாக உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு சம்பவமாக இருக்கட்டும், புதுக்குடி மேலூர் மக்களாகட்டும்செவிலியர் ஜெயலட்சுமி போன்ற கடமையைத் தாண்டிய தனிமனிதர்களாக இருக்கட்டும்மனிதனாக இருப்பதற்கு கருணையை வெளிப்படுத்துவதை விட பெரிதாக எதுவும் இல்லைரத்தன் டாடாவின் மனிதநேய செயல்பாடுகளை போற்றி கவுரவிக்கும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

 

இந்த விருது வழங்கும் விழாவில் பஹ்வான் சைபர்டெக்அசோக் லேலண்ட் மற்றும் விஜிஎன் குழும நிறுவனங்கள், மார்க் மெட்ரோ அன்ட் டெசோல்வ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்நாகா புட்ஸ்சைதன்யா பில்டர்ஸ்டிஎன்கேஜி அறக்கட்டளை ஆகியவை ஆதரவு அளித்தனபெண்கள் விருதை நேச்சுரல்ஸ் குழுமம் நிறுவியதுஇதில் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரிஎத்திராஜ் மகளிர் கல்லூரிஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரிஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகுமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரிஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பிரின்ஸ் குழுமக் கல்லூரிகள் இதில் பங்குதாரர்களாக உள்ளன. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட் அவுட்ரீச் பங்குதாரராகவும்சூரியன் எப்எம் டிஜிட்டல் மீடியா பங்கு


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...