மொத்தப் பக்கக்காட்சிகள்

அதானி வில்மர் லிமிடெட், புதிய பங்கு வெளியீடு ஜனவரி 27, 2022 வியாழக் கிழமை அன்று ஆரம்பம்..! Adani Wilmar Limited

 

அதானி வில்மர் லிமிடெட், 

புதிய பங்கு வெளியீடு 

ஜனவரி 27, 2022  வியாழக் கிழமை அன்று ஆரம்பம்..!

·      ரூ.1 முக மதிப்பு கொண்ட, சம பங்கு ஒன்றின் பங்கு விலைப் பட்டை ரூ. 218  முதல் ரூ. 230 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  

·      பணியாளர் இடஒதுக்கீட்டின் கீழ் ஏலத்தில் பங்கேற்கும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு ஒரு  பங்குக்கு ரூ. 21 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

·       விற்பனை விலை, சம பங்குகளின் முக மதிப்பை விட  குறைந்தபடம் 218 மடங்கு மற்றும் அதிகபட்சம் 230 மடங்கு அதிகம் ஆகும்.

·      பங்கு வெளியீடு வியாழக்  கிழமை  ஜனவரி 27, 2022 தொடங்கி,  திங்கள்  கிழமை  ஜனவரி 31, 2022  நிறைவு பெறுகிறது

·       

மும்பை, ஜனவரி 21, 2022: அதானி வில்மர் நிறுவனத்தின் (Adani Wilmar Limited -the“Company”) பொது மக்களுக்கான புதிய பங்கு வெளியீடு (Initial Public Offering) வியாழக்  கிழமை  ஜனவரி 27, 2022 தொடங்குகிறது. ரூ.1 முக மதிப்பு கொண்ட, சம பங்கு (“Equity Shares”) ஒன்றின் பங்கு விலைப் பட்டை ரூ. 218  முதல் ரூ. 230 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 65 பங்குகளுக்கு ஏலம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு 65-ன் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம்.

 இந்த நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம்  மொத்தம் ரூ.36,000 மில்லியன் (the “Offer”) நிதி திரட்டுகிறது. இந்தப் பங்கு வெளியீட்டில் ரூ. 1,070   மில்லியன் இந்த நிறுவனத்தின்  தகுதியுள்ள பணியாளர்களுக்கு  ஒதுக்கீடு (The “Employee Reservation Portion”) செய்யப்படுகிறது. ரூ.3,600 மில்லியன் மதிப்புள்ள பங்குகள் தகுதியுள்ள நிறுவனப் பங்குதாரர்களுக்கு அதாவது அதானி என்டர்பிரைஸ் நிறுவனத்துக்கு (“AEL” and such portion of the Issue, the “Shareholder Reservation Portion”) ஒதுக்கப்படுகிறது.  நிறுவனத்தின் பணியாளருக்கான ஒதுக்கீடு மற்றும் பங்குதாரர்களுக்கான ஒதுக்கீடு ஆகியவை நிகர வெளியீடு (“Net Issue”) ஆகும்.



பணியாளர் இடஒதுக்கீட்டின் கீழ் ஏலத்தில் பங்கேற்கும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு ஒரு  பங்குக்கு ரூ. 21 தள்ளுபடி வழங்கப்படுகிறது இந்த விவரம் 2022 ஜனவரி 19, தேதியிட்ட ரெட் ஹியரிங் விவரக் குறிப்பில் (“RHP”) இடம் பெற்றிருக்கிறது.

கடந்த 1957 ஆம் ஆண்டின், பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிமுறைகள் (Securities Contracts (Regulation) 19(2)(b)-ன் படி செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருத்தப்பட்ட விதிமுறை 31 (“SCRR”), செபி (Issue of Capital and Disclosure Requirements) விதிமுறைகள் 2018 படி (“SEBI ICDR Regulations”) இந்தப் புதிய பங்கு வெளியீடு நடக்கிறது.  செபி ஐ.சி.டி.ஆர் விதிமுறைகள், விதிமுறை 6(1)-ன் கீழ் ,ஏலமுறையில் (Book Building Process) பங்கு விற்பனை நடக்கிறது. நிகர பங்கு விற்பனையில்  75 சதவிகிதத்துக்கு மேற்படாமல் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு  (“QIBs”, the “QIB Portion”), நிறுவனம் மற்றும் பங்கு விற்பனையாளர்  ஒதுக்க வேண்டும். இதில், 60% விருப்பத்தின் அடிப்படையில் பெரிய முதலீட்டாளர்களுக்கு (“Anchor Investor Portion”), செபி அமைப்பின் ஐ.சி.டி.ஆர் விதிமுறைகளின்படி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு, பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் கேட்டுள்ள விலை அல்லது அதை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில்  அவை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், நிகர கியூ.ஐ.பி (Net QIB)  ஒதுக்கீட்டில் 5% பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும். மீதமுள்ள கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில் உள்ள பங்குகள் விகிதாச்சார அடிப்படையில், செல்லத்தக்க ஏலங்கள் வெளியீட்டு விலையில் அல்லது அதற்கு மேலாக கேட்கப்பட்டிருக்கும்பட்சத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட கியூ.ஐ.பி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். மேலும், மொத்தப் பங்கு வெளியீட்டில் 15 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் நிறுவனம் சாராத (Non-Institutional) முதலீட்டாளர்களுக்கும், 35 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் சிறு தனிநபர் ஏலத்தாரர்களுக்கும் (RIBs) செபி அமைப்பின் ஐ.சி.டி.ஆர் விதிமுறைகளின்படி பங்குகள் ஒதுக்கப்படும். பங்கு வெளியீட்டு விலை (Issue Price) அல்லது அதற்கு அதிகமான விலையில் கேட்கப்பட்டால் செபி அமைப்பின் விதிமுறைகள் படி இப்படி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து தகுதியுள்ள முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) அனைவரும் அஸ்பா  (“ASBA” - Applications Supported by Blocked Amount) முறையில் மற்றும் ஆர்.ஐ.பி –ன் யூ.பி.ஐ ஐ.டி (UPI ID) முறையில் பங்குகளுக்கு  விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில், சுய சான்றளிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கிகள் (Self Certified Syndicate Banks -“SCSBs”) அல்லது யூ.பி.ஐ சிஸ்டத்தில் முடக்கி  (Blocked) வைக்கப்பட்டிருக்கும். ஆங்கர் முதலீட்டாளர்கள் இந்த அஸ்பா முறையில் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

ரெட் ஹியரிங் விவரக் குறிப்பு புத்தகத்தின் 362  ஆம் பக்கத்தின் ஆரம்பத்தில் விரிவான பங்கு வெளியீடு நடைமுறைகளை (Issue Procedure”) விரிவாக பார்க்கலாம். இந்தச் சம பங்குகள் பி.எஸ்.இ  மற்றும் என்.எஸ்.இ (BSE and NSE) ஆகிய  இரண்டு பங்குச் சந்தைகளிலும்  பட்டியலிட உத்தேசிக்கப்பட்டுள்ளன. வரையறுக்கப்படாத இந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பெரிய சொற்களும் (capitalised terms) ரெட் ஹியரிங் விவரக் குறிப்பில் பரிந்துரைக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருக்கும்.


 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...