மொத்தப் பக்கக்காட்சிகள்

இரு வாரத்தில் சர்க்கரை பாதிப்பை குறைக்கலாம்!


இரு வாரத்தில் சர்க்கரை பாதிப்பை குறைக்கலாம்!

மருந்து மாத்திரைகளை காலம் முழுக்க சாப்பிட்டு கொண்டிருக்காமல், உணவையே மருந்தாக மாற்றிக் கொண்டால், நம் உணவு முறைகளிலேயே சர்க்கரையின் அளவை (நீரிழிவு) கட்டுக்குள் மிக எளிதாக கொண்டு வந்து விடலாம்.

தினமும் ஒரு நாட்டு கொய்யா பழத்தை சாப்பிடுங்கள். பழத்தை அப்படியே கடித்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கூடாது.

நாட்டு கொய்யா கிடைக்கவில்லை என்றால் தினமும் இரண்டு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்.

இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
ரத்தம், மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகம் கலந்திருப்பது தான் சர்க்கரை நோய்க்கான காரணம்.

இதற்கு தீர்வு பாகற்காய் மற்றும் நெல்லிக்காய் தான்.
சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் 100 கிராம் பாகற்காய் மற்றும் இரண்டு நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.

இரண்டையும் நன்றாக கழுவிக் கொண்டு, இப்போது இரண்டிலும் விதைகளை நீக்கி சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள். இவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வடித்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் அரைக்கும் முன் தண்ணீர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது சர்க்கரை பாதிப்புக்கான ஜூஸ் தயார். இந்த ஜூஸைத் தொடர்ந்து  ஐந்து நாட்களுக்கு காலை வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.
 ஜூஸ் குடித்து விட்டு 15-20  நிமிடங்கள் வேர்வை வரும் வரை நடக்கவும்.

இது சர்க்கரையின் அளவை வேகமாக குறைப்பதால் உங்கள் சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ரத்தத்தில் குறைவாக சர்க்கரை உள்ளவர்கள் இந்த ஜூஸின் அளவை குறைத்து எடுத்துக் கொள்ளலாம்!

இப்படி செய்து வந்தால்,  இரு வாரங்களில் சர்க்கரையின் அளவு உங்கள் கட்டுக்குள் வந்துவிடும்


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...