மொத்தப் பக்கக்காட்சிகள்

வரவு, செலவுகளை மனைவி பார்த்துக் கொள்கிறார்! – பால்சன் எஞ்சினியரிங் திரு. அழகுதுரை


வாய்ப்புகள் அதிகம் உள்ள 

சுற்றுலாத் தொழில்கள்

சென்னையில் உள்ள மதுரா டிராவல்ஸ் நிறுவனம்
 பற்றியும், அதன் மேலாண் இயக்குநர்
திரு. விகேடி. பாலன் பற்றியும்
 தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 
அவர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள
ஒரு சிற்றூரில் இருந்து சென்னைக்கு வந்து,
தன்னுடைய உழைப்பாலும், முயற்சியாலும்
முன்னேறி வந்த கதையை அறிந்து ஊக்கம் பெற்ற
தொழில் முனைவோர் எண்ணற்றவர்கள். 
இவர் பொதிகை தொலைக்காட்சியில் நெறியாளுகை செய்த ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ இவருடைய சமுதாய அக்கறையை வெளிக்காட்டிய நிகழ்ச்சியாக அமைந்ததோடு,
அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற…
T

பன்றிப் பண்ணை வைக்க ஏற்ற இடம் எது?

 – திரு. ஜான் எட்வின் பேட்டி

பன்றி இறைச்சி உண்ணுபவர்கள் அதிகமாக உள்ள பகுதிகளில்
பன்றிப் பண்ணை வைத்தால் நிச்சயம் வெற்றி அடையலாம்
என்கிறார், திரு. ஜான் எட்வின்.
கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை, காயக்கரைக்கு
 அருகே சித்திரம் கோடு என்ற ஊரில் அமைந்து உள்ள
தன்னுடைய பன்றிப் பண்ணையை எப்படி
வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது குறித்து
அவர் வளர்தொழில் இதழுக்கு அளித்த பேட்டியின் போது,
”’நான் எனது பன்றிப் பண்ணையில்
வெள்ளைப் பன்றிகளையே வளர்த்து…

வரவு, செலவுகளை மனைவி 

பார்த்துக் கொள்கிறார்!

– பால்சன் எஞ்சினியரிங் 

திரு. அழகுதுரை

வேலை பார்த்தாலும், தொழில் செய்தாலும்
முழு மனதுடன் செயல்பட வேண்டும்.
அதுவே வளர்ச்சியைக் கொண்டு வரும்.
சிறப்பாக வேலை செய்பவர்கள்,
 அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளுக்கு
செல்வார்கள். அல்லது வாய்ப்பு வரும்போது
சொந்தமாக தொழில் தொடங்கி வெல்வார்கள். 
இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார்,
 திரு. அழகுதுரை. இவர் சென்னை,
திருமுல்லைவாயில் தொழிற்பேட்டையில்
 உள்ள பால்சன் எஞ்சினீயர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்.
பாளையங்கோட்டை அரசினர் பொறியியல்
கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில்…

சிப்ஸ் பிளாஸ்டிக் உறைகளுக்கு 

மட்டும் ஏன் தடை இல்லை?

– தமிழ்நாடு, 

பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர்

திரு. ஜி. சங்கரன் பேட்டி

தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் (டான்பா) ,
பிளாஸ்டிக் தொழில் முனைவோருக்கு
வழி காட்டும் அமைப்பாகவும்,
ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும்போது
அவற்றுக்கு தீர்வு காண முயற்சிக்கும்
சங்கமாகவும் இருக்கிறது.
 இதன் தலைவர் திரு. ஜி. சங்கரன்.
பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டால்
 சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது,
 எனவே அவற்றின் பயன்பாட்டை
தடை செய்ய வேண்டும் என்ற
எண்ணம் பரவலாக எழுந்து உள்ள…

எட்டு வழிச் சாலை - சில உண்மைகள்

எட்டு வழி சுங்கச் சாலையின் நோக்கம் தூரத்தையும்,
நேரத்தையும் குறைப்பதுதான் என்று அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே உள்ள
 சென்னை-சேலத்திற்கான 3 சாலைகளுக்கான
தூரமும், பயணிப்பதற்கான நேரமும், மதுரவாயல்
 முதல் சேலம் வரை கணக்கிடப்பட்டு உள்ளது.

புதிதாக உத்தேசிக்கப்பட்டு உள்ள எட்டு
வழிச்சாலைக்கான தூரமும், நேரமும்
வண்டலூரை தாண்டி உள்ள
புறவழிச்சாலையில் இருந்து கணக்கிடப்பட்டு,
அதனடிப்படையில் பழைய சாலைகளோடு
 ஒப்பிட்டு நேரமும், தூரமும் குறைவு என்று காட்டப்படுகிறது.
புதிய சாலை 277 கிலோ மீட்டர் தூரம்…

பால்பண்ணைகளை நம் நாட்டுக்கு 

ஏற்ப அமைக்க வேண்டும்

இஸ்ரேல் என்று அழைக்கப்படும் அந்த
நாட்டில் வேளாண்மையும்,
பால்பண்ணைத் தொழிலும்
உலகத்திலேயே மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது. 

இயற்கை வளம் குன்றிய வறண்ட பகுதி அதிகம்
உள்ள இந்த நாட்டில், பசுக்கள், சராசரியாக
ஒரு நாளைக்கு முப்பத்தைந்து லிட்டர் பால்
தருவது ஒரு வியப்பு ஆகும்.
இதற்கு இங்கு குடியேறி உள்ள கூர்மதி நுட்பமும்,
ஆர்வமும் கொண்ட விவசாயிகளே காரணம்.
நாளொன்றுக்கு பன்னிரெண்டு லிட்டர் பால்
தந்த பலாடி இனப் பசுக்கள் இருந்த இஸ்ரேல் நாட்டில் முப்பத்தைந்து லிட்டர்…

வணிக வளர்ச்சிக்கு காந்தி 

சொன்ன ஆலோசனைகள்

அண்ணல் காந்தியடிகளை பொதுவாக நாட்டுக்கு
விடுதலை பெற்றுத் தந்தவர் என்றுதான்
பெரும்பாலானவர்கள் எண்ணுகின்றனர்.
ஆனால் அவர் பன்முக ஆளுமை
 கொண்ட மாமனிதர். தனி மனித வாழ்விலும்,
பொது சமுதாய வாழ்விலும் அவர் தொட்டு
முத்திரை பதிக்காத துறைகள் இல்லை.
அவர் ஒரு சிறந்த தொழில் முயல்வோர்.
தொழில்களை உருவாக்கியவர். அதற்கான
முதலீட்டைக் கண்டு பிடித்தவர். வேலை
வாய்ப்பை உருவாக்கியவர். உற்பத்தி
செய்த பொருட்களுக்கு அங்காடியைக் கண்டு பிடித்தவர்.
ஒரு சிறந்த உற்பத்தியாளர், வணிகர் ஆகியோருக்கு வேண்டிய…

ஓய்வுக்குப் பிறகும்

 கடை வைக்கலாம்!

சென்னையில் உள்ள புனித இசபெல் மருத்துவமனையில்
காவலராக இருந்து ஓய்வு பெற்றவர் திரு. ஜான்சன்.
இவருடைய மகன் திரு. பிரகாஷ் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் மயிலாப்பூரில் ஒரு தேநீர்க் கடை நடத்தி வருகிறார்.

 ஒய்வு பெற்ற பிறகு தனி ஆளாக ஒரு கடை நடத்தும் அனுபவத்தை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
” நான் ஓய்வு பெற்ற பிறகு ஏதாவது செக்யூரிட்டி
 வேலைக்கு போகலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது காவேரி மருத்துவமனையில்
 பில்லிங் பிரிவில்…


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புநாள் ஏப்ரல் 27, 2024 மிகக் குறைந்த கட்டணம்..

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நாள் 27/04/2024 நேரம் : மாலை 7.00 • மியூச்சுவல் பண்டு வழியாக பணத்தை பெருக்குவது எப்படி?  • பங்...