மொத்தப் பக்கக்காட்சிகள்

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட், ஓப்பன் எண்டெட், புதிய லார்ஜ் கேப் ஃபண்ட் ‘மஹிந்திரா பிரகதி புளூசிப் யோஜனா’ அறிமுகம்

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட், ஓப்பன் எண்டெட், புதிய லார்ஜ் கேப் ஃபண்ட் ‘மஹிந்திரா பிரகதி புளூசிப் யோஜனா’ அறிமுகம்

 இந்தியாவின் முன்னணி நிறுவனப் பங்குகளை கொண்ட தரமான முதலீட்டுக் கலவை; பங்குச் சந்தையின் மிகவும் நிலையான பாதி முதலீடு 

ஆல்பா அடிப்படையில் பாட்டம் அப் முறையில் பங்குகள் தேர்வு 

புதிய ஃபண்ட் வெளியீடு பிப்ரவரி 22, 2019 தொடங்கி மார்ச் 08, 2019-ல் நிறைவு 



மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (Mahindra and Mahindra Financial Services Limited -MMFSL)-இன் முழுமையான துணை நிறுவனம் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் (Mahindra Mutual Fund). இந்த நிறுவனம், மஹிந்திரா பிரகதி புளூசிப் யோஜனா (Mahindra Pragati Bluechip Yojana) என்கிற புதிய பங்குச் சந்தை சார்ந்த, எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யும் மற்றும் யூனிட்களை விற்று பணமாக்கும் வசதியை கொண்ட ஓப்பன் எண்டெட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.

 இது நீண்ட காலத்தில் அதிக மூலதன ஆதாயத்தை எதிர்ப்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. இதில் திரட்டப்படும் நிதி, மிகப் பெரிய பங்குச் சந்தை மதிப்பு (large cap) கொண்ட நிறுவனப் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.

இதில் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளின் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் என்கிற டெரிவேட்டிவ் (derivative) சந்தையிலும் முதலீடு செய்யப்படும். 

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. அஷுடொஷ் பிஸ்னோய் (Mr Ashutosh Bishnoi, MD & CEO, Mahindra Mutual Fund) கூறும் போது, “பல்வேறு பங்குச் சந்தை சூழல்களில் இந்தியாவின் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளின் விலை குறைவான ஏற்ற இறக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்தப் பங்குச் சந்தை சூழல்களில், லார்ஜ் கேப் பங்கு மதிப்பீடுகள் ஒப்பிட்டளவில் நியாயமாக உள்ளன. அந்த வகையில், இந்த லார்ஜ் கேப் பங்குகள் எப்போதும் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பங்குச் சந்தையின் பங்களிப்பு சாதகமான போக்கில் இருக்கிறது. லார்ஜ் கேப் பங்குகளின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அவை, இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பில் பாதிக்கும் மேலாக இருந்து வருகின்றன. அந்த வகையில் முதலீட்டுக்கு மிகவும் ஏற்றவையாக இருக்கின்றன. இந்தத் திட்டம், கவர்ச்சிகரமான நீண்ட கால முதலீட்டை வாய்ப்பை அளிக்கிறது என நாங்கள் நம்புகிறோம். அந்த வகையில், தங்களின் முதலீட்டின் மூலம் அதிக மூலதன அதிகரிப்பை விரும்பும் முதலீட்டாளர்கள், இந்த மஹிந்திரா பிரகதி புளூசிப் யோஜனா ஃபண்டை முதலீட்டுக்காக கவனிக்கலாம்.”


இந்தப் புதிய ஃபண்ட் வெளியீடு பிப்ரவரி 22, 2019 தொடங்கி மார்ச் 08, 2019-ல் நிறைவடைகிறது. இந்தத் திட்டத்தின் மறு விற்பனை, முதலீட்டாளர்களுக்கு யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து வணிக தினங்களுக்குள் தொடங்கும். 

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை பங்குச் சந்தை முதலீட்டு உத்தியாளர் திரு. வெங்கடராமன் பாலசுப்ரமணியன், (Mr. Venkataraman Balasubramanian, Chief Equity Strategist, Mahindra Mutual Fund) கூறும் போது, “மஹிந்திரா பிரகதி புளூசிப் யோஜனா ஃபண்ட் - இன் முதலீட்டு கலவை (Portfolio) ஆல்பா அடிப்படையில் அமைவதோடு, வளர்ச்சி மற்றும் மதிப்பு முதலீட்டு பாணி (Style of investing Growth and Value) கலவையாக இருக்கும். முதலீட்டு உத்தி என்கிற போது, வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள் டாப் டவுன் முறையில் அடையாளம் காணப்படும். அதேநேரத்தில். முதலீட்டுக்கான நிறுவனப் பங்குகள் தேர்வு என்பது பாட்டம் அப் முறையில் மிகப் பெரிய 100 நிறுவனங்களிலிருந்து இருக்கும். இந்த நிறுவனங்கள் சிறப்பான நிர்வாகம் மற்றும் வலிமையான தலைமையை கொண்டிருக்கும். முதலீட்டு காலம் குறுகிய காலம் முதல் நடுத்தர காலமாக இருக்கும்.”

இந்தத் திட்டத்தில் திரட்டப்பட்ட நிதியில் குறைந்தபட்சம் 80% மிகப் பெரிய நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சார்ந்த நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். 20% வரை இதர நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பங்குச் சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.இந்தத் திட்டத்தில் 20% வரை கடன் மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். 10% வரை REITs & InvIT களின் யூனிட்களில் முதலீடு செய்யப்படும்.

 மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. பங்குச் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது, முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். (Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.) 

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் பற்றி..! 

மஹிந்திரா அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (Mahindra Asset Management Company Private Limited), என்பது கம்பெனிகள் சட்டம் 1956-ன் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது, மஹிந்த்ரா மியூச்சுவல் ஃபண்ட்ன் முதலீட்டு பிரிவாகும்.

மஹிந்த்ரா மியூச்சுவல் ஃபண்ட் என்பது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (Mahindra and Mahindra Financial Services Limited -MMFSL)ன் முழுமையான துணை நிறுவனம் ஆகும். மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட்,இந்தியா முழுக்க பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகித்து வருகிறது. குறிப்பாக,கிராமப்புறம் மற்றும் சிறிய நகர்ப்புற பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சட்டப்பூர்வ விவரங்கள்: மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட், இந்திய டிரஸ்ட்கள் சட்டம், 1882 -இன் கீழ் அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்பான்சர்: மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (ஸ்பான்சரின் பொறுப்பு ரூ. 1,00,000/)
அறங்காவலர் (Trustee): மஹிந்திரா டிரஸ்டீ கம்பெனி பிரைவேட் லிமிடெட். முதலீட்டு மேலாளர் (Investment Manager): மஹிந்திரா அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட். ஸ்பான்சர், டிரஸ்டி மற்றும்முதலீட்டு மேலாளர் நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் பற்றி..!

மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (மஹிந்திரா ஃபைனான்ஸ்), என்பது இந்தியாவின் முன்னணி வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின் ஓர் அங்கம். கிராமப்புறம் மற்றும்சிறிய நகர்புறங்களில் கவனம் செலுத்தி வரும், மஹிந்திரா ஃபைனான்ஸ் 59 லட்சம் (5.9 Million) மேலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதோடு 900 கோடி அமெரிக்க டாலருக்கு (USD 9 Billion ) மேலான நிதிச் சொத்துகளை நிர்வகித்து வருகிறது.மஹிந்திரா ஃபைனான்ஸ், வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் வாங்க கடன் அளிக்கும் முன்னணி நிறுவனம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) நிலையான வைப்புகளும் கடன்களும் வழங்குகிறது.

இதற்கு நாடு முழுவதும் 1,313 அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் 7,000 நகரங்கள் மற்றும் 3,50,000 கிராமங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டில் (Dow Jones Sustainability Index), வளர்ந்து வரும் பங்குச் சந்தைகள் பிரிவில் (Emerging Market Category) இடம் பிடிக்க போகும் இந்தியாவைச் சேர்ந்த ஒரே வங்கிச் சாரா நிதி நிறுவனமாக மஹிந்திரா ஃபைனான்ஸ் இருக்கும். 2018 ஆம் ஆண்டுக்கான, இந்தியாவில் பணிபுரிய மிகச் சிறந்த நிறுவனங்கள் (Best Companies to work for 2018, by Great Place to Work® Institute) என்பதில் 14வது இடத்தை மஹிந்திரா ஃபைனான்ஸ் பிடித்துள்ளது. மேலும், த எகனாமிக் டைம்ஸ் (The Economic Times) -ன் வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் சிறந்த பிராண்ட்கள் (BFSI Brands) பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்த நிறுவனத்தின், இன்சூரன்ஸ் தரகு துணை நிறுவனம், மஹிந்திரா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட் (Mahindra Insurance Brokers Limited -MIBL) ஆக உள்ளது. நேரடி மற்றும் மறுகாப்பீட்டு பரிமாற்ற சேவைகள் வழங்கும் உரிமம் பெற்றது.

 மஹிந்திராஃபைனான்ஸின் துணை நிறுவனமான மஹிந்திரா ரூரல் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Mahindra Rural Housing Finance Limited - MRHFL) நாட்டிலுள்ள கிராமங்கள் மற்றும் சிறிய நகர பகுதிகளில் உள்ள தனிநபர்களுக்கு வீடு வாங்க,வீட்டை புதுப்பிக்க, வீடு கட்ட கடன் வழங்கி வருகிறது.

 மஹிந்திரா ஃபைனான்ஸின் முழுமையான துணை நிறுவனம், மஹிந்திரா அஸெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (Mahindra Asset Management Company Private Limited - MAMCPL), மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாளராக (Investment Manager) செயல்படுகிறது.

 இந்த நிறுவனம், அமெரிக்காவில் மஹிந்திரா ஃபைனான்ஸ் யு.எஸ்.ஏ எல்எல்.சி. (Mahindra Finance USA LLC) என்கிற பெயரில் கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது அமெரிக்காவில் டிராக்டர்கள் வாங்க கடன் வழங்க, ராபோ வங்கியின் (Rabo Bank) துணை நிறுவனமான டி லாஜ் லான்டன் (De Lage Landen) கூட்டுச் சேர்ந்து செயல்பட்டு வருகிறது

மஹிந்திரா பற்றி..!

மஹிந்திரா குழுமம், 2,070 கோடி அமெரிக்க டாலர் (USD 20.7 billion) மதிப்பு கொண்டது. இது, கிராமப்புற வளர்ச்சி, சிறிய நகரங்களின் வளர்ச்சி, புதிய வணிகம் போன்றவற்றில் நாட்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறது.

மேலும் பயன்பாட்டு வாகனங்கள் (utility vehicles), தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சுற்றுலா இல்லங்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறது. உற்பத்தி எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப் பெரிய டிராக்டர் நிறுவனம். வேளாண் வணிகம், வாகன உதிரிப் பாகங்கள், வர்த்தகவாகனங்கள், வேகப் படகுகள், ஆலோசனை சேவைகள், எரிசக்தி, தொழிற்சாலை கருவிகள், சரக்கு போக்குவரத்து, ரியல் எஸ்டேட், உருக்கு, விமானம், ராணுவம், இரு சக்கர வாகனம் என பல்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவை தலைமையிடமாக கொண்ட இந்தக் குழுமத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,40,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்,

 மஹிந்திரா பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள www.mahindra.com / Twitter and Facebook: @MahindraRise

 Media contact information:Metabelle Lobo Biren Shah, General Manager, Group Communications Communication & Marketing Mahindra Group Mahindra Asset Management Company Pvt Ltd Tel: +91 22 24975178 Contact: +91 9833076076 Email:

lobo.metabelle@mahindra.com Email: shah.biren3@mahindra.com
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

நாணயம் விகடன் நடத்தும் 'ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி Portfolio

நாணயம் விகடன்  நடத்தும் 'ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!' என்கிற நேரடி பயிற்சி வகுப்பு  திருச்சியில்  ஜூன்   15 ,...