வீட்டு வாடகை ஒப்பந்தம் 2025 : உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்..!
வீட்டு வாடகை விதிமுறைகள் புதிய சட்டம் 2025-ன் படி இரண்டு மாத வாடகைக்கு
மேல் முன்பணம் வசூலிக்கக்கூடாது, வாடகை ஒப்பந் தத்தை 60 நாட்களுக்குள் பதிவு
செய்யாவிட்டால் ரூ.5,000 அபராதம் என வீட்டு உரிமையா ளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட் டுள்ளன.
வீட்டு வாடகை
விதிமுறைகள் சட்டம்:
வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாட கைக்கு குடியேறுவோர் மற்றும்
வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டத்தின் விதிமுறைகள்படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு
உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன.
2 மாத வாடகை முன்பணம்..!
இதன்படி இனி இரண்டு மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் போதுமானது, வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்திருக்க
வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இச்சட்டத்தில் வீடு வாடகைக்கு எடுப்பவர்கள். வீட்டு உரிமையாளர்கள் என இரு
தரப்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் உள்ளன.
முக்கிய அம்சங்கள்
அவற்றின் முக்கியமான சில அம்சங்கள் பின்வருமாறு:-* வீட்டை வாடகைக்கு
விட்டால், அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் பதிவு செய்தி ருக்க வேண்டும். முன்பு சாதாரண
ஒப்பந்த பத்திரத் தில் எழுதி கையெழுத்திட்டால் போதுமானதாக இருந்தது. ஆனால், புதிய
சட்டத்தின்படி 2 மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால்
ரூ.5,000வரை அபராதம் விதிக்கப்படும்.
* ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு
செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடக்கூ டாது.
*வீட்டு வாடகைக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்கக்கூடாது. வணிக
கட்டிடங்களுக்கு 6 மாத வாட கையை முன்பணமாக வசூலிக்கலாம்.
ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதங்கள் கழித்து தான் வாடகையை உயர்த்த
வேண்டும். அவ்வாறு உயர்த்துவதற்கும் இரண்டு மாதங்கள் முன்பே நோட்டீசு மூலம்
வாடகைதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
* வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாள்களுக்குள்
சரி செய்ய வேண் டும். இல்லையென்றால், வாடகைதாரர்களே அதை சரி செய்துகொண்டு, வாடகை
தொகையில் கழித்துக்கொள்ளலாம்.
* வாடகைக்கு இருக்கும் வீட்டை சரிபார்க்க, உரிமையாளர் நினைக்கும்போதெல்லாம்
நுழைய முடியாது. 24 மணிநேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க
வேண்டும்.
* வாடகைக்கு இருப்போரை காரணமின்றி காலி செய்ய வலியுறுத்தக்கூடாது. வாடகை
செலுத்தாமல் இருத்தல், சேதம் ஏற்படுத்துதல் என குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல்
காலி செய்ய வற்புறுத்தக்கூடாது.
*வாடகை தகராறு வழக்கு, வீட்டை காலிசெய்யும் வழக்கு போன்றவற்றுக்கு இனி
இரண்டு மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு தீர்ப் பாயம்
அமைக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்.
* வீட்டு வாடகை ரூ.50,000 மேல் இருந்தால் டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டும்.
சிறிய அல்லது நடுத்தர வாடகை வீட்டினருக்கு டி.டி.எஸ். விலக்கு வரம்பு ரூ.6 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது.
பதிவு செய்வது எப்படி?
வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும். இதை சார்
பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆதார்,
பான் அட்டை என ஏதேனும் ஓர் ஆவணம் போதுமானது. வாடகைதாரர்களுக்கு குறைவான முன்பணம்,
திடீர் வாடகை உயர்வு, சட்டப் பாதுகாப்பு போன்ற பலன்கள் இதன்மூலம் வலியுறுத்தப்படும்.
வீட்டு உரிமையாளர்களுக்கு வரி நன்மைகள், வாடகை வசூல் எளிது, வலுவான ஆவணம்
உருவாக்கம், தகராறுகளுக்கு தீர்ப்பு, மோசடி ஆகியை தடுக்கப் படும்.