மொத்தப் பக்கக்காட்சிகள்

மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும். Health

"இறைவனின் சூட்சும சக்திகள்"

*சூட்சும சக்திகளும் 
நமது உடலும், 
சூட்சும மெஞ்ஞானத்தை உணர்வோம்!*

*1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம்  செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.*

*நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.*

*2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.*

*3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.*

*4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.*

*5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.*

*6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.*

*7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.*

*8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.*

*9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.*

*10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.*

*11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது.*

*12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.*

*13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே 
ஆகும்.*

*14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.*

*15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.*

*16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.*

*17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.*

*18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.*

*19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.*

*20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.*

*21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.*

*22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.*

*23. வலி என்பது உடலின் மொழி.*
*அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.*

*24. நிகழ்கால தன்உணர்வுடன் இருக்க பழகுங்கள்.*

*25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.*

*26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல்  நோயுறுகிறது.*

*27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.*

*28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.*

*29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.*

*30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.*

*31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.*

*32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.*

*33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.*

*34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.*

*35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.*

*36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.*

*37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.*

*38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.*

*39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.*

*40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.*

*41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.*

*42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.*

*43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

*44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.*

*45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.*

*46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.*

*47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.*

*48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.*

*49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

*50. தூக்கம் என்பது,*
     *விழிப்புணர்வு அற்ற* *தியானம்.*
  
  *தியானம் என்பது,*விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.*

* இறைவனின் சூச்சும மெஞ்ஞானத்தை உணர்வோம்!*

எல்லா உயிர்களும் 
இன்புற்று வாழ்க 
கொல்லா நெறி 
உலகெலாம் ஓங்குக.

பசித்திரு---தனித்திரு
 --------விழித்திரு--------

அருட் சற்குரு தந்தை
அருள் வள்ளலார் தயவு
அருட் சிவபதியாம்
அருட்பெருஞ்ஜோதி 
அருட் ஜோதி தெய்வம்
............ என்னை.............
ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்.

அருட் திருவருட் பிரகாச 
🍁திரு வள்ளலார்🍁
🍁திருவள்ளுவர் 🍁
சத்திய ஞானசபை
சமரச சுத்த சன்மார்க்க சத்விசார ஞானசபை
வள்ளலார் குடில் 
பாத்திமா தியேட்டர் எதிர்ப்புறம் தேனி

அக அனுபவத்தில்
அக அறிவே தன்னறிவு 
அக விழிப்புணர்வுடன் 
அக உள் முகப் பயணம்.

ஆனந்தம் பரமானந்தம் ஆனந்தமாக இருங்கள் 
அருட் சற்குரு தயவு 
ஆன்ம வணக்கம் 
அடியேன் 
ஆன்ம நேயன் 
அருள் வீரா சுவாமி.🙏🙏 
ஆனந்த குடில் தேனி.
9080301873
9442025394.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...