மொத்தப் பக்கக்காட்சிகள்

உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் பான்ஸூ Bhanzu நிறுவனம், 15 மில்லியன் டாலர் நிதி திரட்டுகிறது,

பான்ஸூ நிறுவனம்,  15 மில்லியன் டாலர் நிதி திரட்டுகிறது, உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் கணிதப் பயத்தை போக்கும்  தனது பணியை துரிதப்படுத்துகிறது..!

 

இந்தியா, செப்டம்பர் 23, 2022: உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என அழைக்கப்படுபவர் நீலகண்ட பானு (Neelakantha Bhanu). இவரால் கடந்த 2020 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகளாவிய கணித கற்றல் தளம் பான்ஸூ (Bhanzu) ஆகும். இந்த நிறுவனம் இன்று சீரிஸ் ஏ (Series A) வகை நிதி, 15 மில்லியன் டாலரை சர்வதேச முதலீட்டு நிறுவனமான எய்ட் ரோட்ஸ் வென்சர்ஸ் (Eight Roads Ventures) நிறுவனத்திடமிருந்து திரட்டி உள்ளது. மற்றோரு பன்னாட்டு நிறுவனமான பி கேப்பிட்டல் (B Capital) பான்ஸூ நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளது.



 

 


இந்த நிதியை, பான்ஸூ நிறுவனம், சிறப்பான முறையில் கற்பிக்கும் அனுபவத்தை உருவாக்கவும், மேலும் சுவாரஸ்யமான மற்றும் விளைவுகளை மையப்படுத்திய உள்ளடக்கத்துடன் அதன் கணித பாடத்திட்டத்தை (curriculum) வலுப்படுத்தவும் அதன் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த  பயன்படுத்தும். தமிழ்நாட்டில், 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய சாதனை ஆய்வின்படி, 8 ஆம் வகுப்பு மாணவர்களின் கணிதப் படிப்பறிவு மிகவும் குறைவாக உள்ளது, அவர்களின் ஒட்டுமொத்த கணித செயல்திறனைப் பொறுத்தவரை வெறும் 30 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மாணவர்கள் அபரிமிதமான திறன்களைக் கொண்டிருந்தாலும் இந்தச் செயல்திறன் அறிக்கை கவனிக்கப்பட்டது.

 

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட பானு, மாணவர்களை முன் எப்போதும் இல்லாத வகையில் கணிதத்தை ரசிக்கவும், கணிதத்தில் சிறப்பாக செயல்படவும், எதிர்காலத்தில் அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கவும் கூடிய ஒரு முழுமையான கணித பாடத்திட்டத்தை உருவாக்க தனிப்பட்ட முறையில் உந்துதல் பெற்றார்.

 

பான்ஸூ நிறுவனத்தின்  நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நீலகண்ட பானு, உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் ஆவார். அவர் கணித மேதை சகுந்தலா தேவியின் கணித சாதனைகளை முறியடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில், மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக்கில் (Mind Sports Olympics) இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று  இந்தியாவை பெருமைப்படுத்தினார். இதற்குப் பிறகு, பானு, பான்ஸூ நிறுவனத்தை நிறுவினார். இது கணிதக் கற்றல் தளமாகும். இந்தத் தளம் கணித பயத்தை போக்கும் மற்றும் ஒழிக்கும் நோக்கில் செயல்படுகிறது.

 

இந்த சமீபத்திய மேம்பாடு குறித்து வேகமான மனித கால்குலேட்டரும், பான்ஸூவின் தலைமை செயல் அதிகாரியுமான  நீலகண்ட பானு, பேசும் போது, "இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் சரியான கற்றல் முறைகளுடன் கணிதத்தைக் கற்கும் திறன் கொண்டவர்கள் என்று நான் நம்புகிறேன். எனது கணித பாடத்திட்டம் மாணவர்களுக்கு கணித பயத்தை போக்க உதவுவதோடு, அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் தொழில் செய்ய, வேலை செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது.

 

இந்தியா கணித மேதைகளின் பூர்வீகம் ஆகும். ஆர்யபட்டா முதல் ராமானுஜர் முதல் சகுந்தலா தேவி வரை, மற்றும் இந்திய மனங்கள் கற்பனை செய்ய முடியாத திறன் கொண்டவை. அதிகமான இந்தியர்கள் தங்களின் உண்மையான மனதிறனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதை அடைய கணிதமே சிறந்த வழி என்றும் பான்ஸூ விரும்புகிறது. பான்ஸூ கணிதப் படிப்புகளின் உதவியுடன், ஒவ்வொரு மாணவரும் சரியான முறையில் கணிதத்தைக் கற்கவும் நேசிக்கவும் தொடங்கலாம்." என்றார்.  

 

இந்த நிறுவனம் 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கணிதத்தில் கற்றல் திட்டங்களை வழங்குகிறது. மேலும் மாணவர்கள் கணிதத்தில் 4 மடங்கு விரைவாகவும் சிறப்பாகவும் மாற உதவுகிறது. மேலும் முக்கியமாக மாணவர்கள் அறிவாற்றல் திறன்களை வளர்ப்பதற்கான சரியான அடித்தளத்தை உருவாக்குகிறதுஉலகெங்கிலும் 4 வருட கால விரிவான தரவு சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பிறகு பான்ஸூவின் பாடத்திட்டம் நீலகண்ட பானுவால் தனிப்பட்ட முறையில் நிர்வகிக்கப்பட்டது. இது ஒரு பாட்டம்ஸ்-அப் அணுகுமுறையை (Bottoms-up Approach) உருவாக்கி கணிதக் கற்றலின் அடித்தளத்தையே மாற்றி அமைத்தது.

 

பான்ஸூ, மாணவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவாலைத் தீர்த்து, ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்வான கணிதக் கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. புதுமையான கற்றல் நுட்பங்களுடன் கணிதத்தின் மீதான விருப்பத்தை வளர்ப்பதற்காகவும், உலகின் மிகவும் சிந்தனை மூலம் முழுமையான கணித பாடத்திட்டமாக தன்னை நிலை நிறுத்துவதற்காகவும் பான்ஸு நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

பானு மனநல தடகள அரங்கில் இந்தியாவின் ஜோதியை ஏந்தியவர் என சொல்லலாம். கணிதத்தை ஒரு வேடிக்கையான விளையாட்டாக ஊக்குவித்தல் மற்றும் பிரபலமான பிரதான கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவது கணிதப் பய சிக்கலைத் தீர்க்க முன்னோக்கி செல்லும் வழியாக உள்ளது. மேலும் ஒவ்வொரு குழந்தையும் கணிதத்தை சரியான முறையில் கற்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

 

உலகின் வேகமான மனித கால்குலேட்டர் நீலகண்ட பானுவைப் பற்றி (About Neelakantha Bhanu - the World's Fastest Human Calculator)




 


உலகின் அதிவேக மனித கால்குலேட்டராக அறியப்படும் நீலகண்ட பானு பிரகாஷ், உலகளவில் கணித கற்றல் அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய கணித எட்-டெக் தளமான பான்ஸூவின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார்.

 

17 வயதில், சகுந்தலா தேவி போன்ற கணித மேதைகளின் உலக சாதனையை முறியடித்தார். பானு யாராலும் தோற்கடிக்க முடியாதவராக இருக்கிறார். மேலும் அவர் பெற்ற உலகளாவிய அங்கீகாரத்தின் எல்லைக்கு அப்பால் தனது விதிவிலக்கான திறன்களை பலனடையச் செய்ய மேலும் ஒரு புது முயற்சியை எடுத்தார். நீலகண்ட பானு பிரகாஷ், லண்டனில் உள்ள மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக்கில் மென்டல் கால்குலேஷன் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் 2020 இல் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் மற்றும் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பல உலகப் பிரமுகர்களால் கொண்டாடப்பட்டார்.

 

பல ஆர்வமுள்ள வளமான மனங்களுக்கு ஓர் உத்வேகமாக, பானு தனது ஆறுதல் மண்டலத்திலிருந்து அறிவாற்றல் மிக்கப் பாடத்திட்டத்தை உருவாக்கினார். அது கணிதத்தைக் கற்றுக்கொள்வதை மாணவர்களுக்கு மிகவும் வேடிக்கையாகவும் தொடர்புபடுத்தவும் செய்கிறது. பானு 23 நாடுகளுக்குச் சென்று, 1000-க்கும் மேற்பட்ட வகுப்புகளை எடுத்து ஏராளமான மாணவர்களுக்கு கற்பித்துள்ளார். மேலும் கணிதத்தை விளையாட்டாக மேம்படுத்தும் முயற்சியில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை கவர்ந்துள்ளார். பானு 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பல பிரிவுகளில் 4 உலக சாதனைகள் மற்றும் 50 லிம்கா புத்தக சாதனைகளை முறியடித்தார்.  இந்திய தேசிய இளைஞர் கவுன்சில் இன் இந்தியாவின் 'யூத் ஐகான் 2020' விருதையும் வென்றார். ஃபோர்ப்ஸ் ஆசியா 2022 இன்30 வயதுக்குட்பட்ட நுகர்வோர் தொழில்நுட்பப் பிரிவிலும் அவர் இடம்பெற்றார்..

 

பான்ஸூ பற்றி (About Bhanzu):


பான்ஸூ என்பது உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் எனப்படும் நீலகண்ட பானு என்பவரால் நிறுவப்பட்ட கணித கற்றல் தளமாகும்.  இது நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் கூடியது.  இது மாணவர்கள் அவர்களின் அறிவாற்றல் திறன்களை வளர்ப்பதன் மூலமும் அவர்களின் முக்கிய கணித புத்திசாலித்தனத்தை வளர்ப்பதன் மூலமும் கணிதத்தில் 4 மடங்கு விரைவாகவும் சிறந்து விளங்கவும் உதவுகிறது.  


உலகெங்கிலும் 4 வருட கால விரிவான தரவு சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பிறகு பான்ஸூவின் பாடத்திட்டம் நீலகண்ட பானுவால் தனிப்பட்ட முறையில் நிர்வகிக்கப்பட்டது. இது ஒரு பாட்டம்ஸ்-அப் அணுகுமுறையை  உருவாக்கி கணிதக் கற்றலின் அடித்தளத்தையே மாற்றி அமைத்திருக்கிறது.  பான்ஸூவின் தொலைநோக்கு பார்வை, தனிப்பயனாக்கப்பட்ட முறையைப் பயன்படுத்தி சிறந்த சிந்தனை மூலம் திட்டத்தை உருவாக்குவதாகும். இது மாணவர்கள் இடையே நம்பிக்கையை உருவாக்குகிறது. அவர்கள் உண்மையான உலகில் கணிதத்தைப் பயன்படுத்துவதை சாத்தியமாக்குகிறது.

 

2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய்களின் போது தெலுங்கானா அரசாங்கத்தின் "அதிகாரப்பூர்வ கணிதக் கல்விக் கூட்டாளராக" பான்ஸூ நிறுவனம்  நியமிக்கப்பட்டது. இது மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களை அவர்களின் திட்ட முடிவிலி மற்றும் லாக்டவுனில் திட்ட கணிதம் (Project Infinity and Project Math in Lockdown) மூலம் சென்றடைந்தது

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...