மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் - ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஃபண்ட்

 

இந்திய பங்குச் சந்தை, கோவிட் -19 தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து மிகவும் அதிக ஊசலாட்டங்களைக் கண்டது. இது வரை உதாரணம் இல்லாத வகையில் அதிக ஏற்றம்  மற்றும்  அதிக இறக்கத்தை சந்தித்தது.

கொரானா தொற்று பாதிப்பு, நமது அன்றாட வாழ்க்கை முறையில்,  குறிப்பிடத்தக்க மாற்றத்தை பின்பற்றுவதற்கு நம் அனைவரையும் கட்டாயப்படுத்தியது. மேலும், வீட்டிலேயே ஒடுங்கி கிடக்கவும் / வீட்டிலிருந்து வேலை செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் வாய்ப்பை அளித்தது. மேலும்,  நிறுவனங்களின் பல புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் இந்தத் தொற்றுநோய் பரவல் குறிப்பிடத்தக்க காரணமாக அமைந்தது. மேலும் பல நிறுவனங்கள், அவற்றின் வணிக மாடலை மறுகட்டமைக்கும் சூழலை ஏற்படுத்தியதோடு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளவும் வைத்தது. பல துறைகளில் அது மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொற்று பாதிப்பால் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தியாவிலும் உலக அளவிலும் நம்மைச் சுற்றியுள்ள சீர்குலைக்கும் போக்குகளை (disruptive trends) துரிதப்படுத்தியுள்ளன. மேலும் இந்தப் போக்குகள் தொற்றுநோய்க்கு பிந்தைய பொருளாதாரத்திலும் நீடிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம்.

அரசாங்க உந்துதல்கள், உலகளாவிய முதலீடுகள் மற்றும் உள்நாட்டு புத்தி கூர்மை மற்றும் குறைந்த செலவில் கூடுதல் கவனம் செலுத்துதல், பரந்த தத்தெடுப்பு மாதிரிகள் ஆகியவை ஏற்கனவே இந்தியாவில் ஆதார், யூ.பி.ஐ போன்ற தனித்துவமான உருமாறிய தீர்வுகளுடன் வந்திருப்பதைக் கண்டுள்ளோம். எனவே, சீர்குலைவு மற்றும் அதன் விளைவாக வரும் புதுமைகள் புதியது அல்ல, தொழில்துறை புரட்சியிலிருந்து சரி - வரலாற்றின் மூலம் பல தடவைகள் இவற்றை நாம் கண்டிருக்கிறோம் - இந்த நேரத்தில் வேறுபட்டது மாற்றத்தின் வேகம் மற்றும் ஒவ்வொரு துறையிலும் நன்கு நிதியளிக்கப்பட்ட சூழ்நிலைகள் இருப்பது வணிகம் செய்வதற்கான பாரம்பரிய வழி முறைகளை மேம்படுத்தி இருக்கின்றன.



முதலீட்டாளர்களுக்கு இதன் அர்த்தம் என்ன?  (What does this mean for investors?)

 ஒரு கோணத்தில் நம்மைச் சுற்றியுள்ள இந்தப் புதிய மாற்றங்கள் அனைத்தும் குழப்பமானதாகத் தோன்றலாம். இருந்தாலும் இந்த மாற்றங்களிலிருந்து பயனடைய முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பும் உள்ளது.

நிதிச் சந்தைகள் பொதுவாக சீர்குலைப்பு மூலம் ஏற்படும் புதுமைகளை அங்கீகரிப்பதில் மெதுவாக இருக்கும். இந்த எதிர்பாராத மாற்றத்தின் தாக்கத்தை பெரும்பாலான முதலீட்டாளர்கள் கவனிக்கப்பதில்லை. இது பங்குச் சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கும் சீர்குலைக்கும் மாற்றத்தின் உண்மையான வளர்ச்சி ஆற்றலுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஓர் இடைவெளியை ஏற்படுத்தக்கூடும்.

ஆக்ஸிஸ் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஃபண்ட் (Axis Special Situations Fund) என்பது இந்தியா மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் இந்த வாய்ப்புகளில் கவனம் செலுத்தி முதலீடு செய்யும் ஒரு பிரத்யேக பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டை உருவாக்கும் ஆக்ஸிஸ் ஏ.எம்.சி (Axis AMC) -ன் தனித்துவமான முயற்சியாகும்.

 

ஆக்ஸிஸ் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஃபண்ட் (Axis Special Situations Fund)

ஆக்ஸிஸ் ஏ.எம்.சி, புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை கண்டுபிடிப்பதில் முன்னணியில் உள்ளது. மற்றும் அதன் முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலத்தில் நல்ல செயல்திறனை (வருமானம்) வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்ட ஒரு வலுவான முதலீட்டு செயல்முறையை உருவாக்கி இருக்கிறது.

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், பல பெரிய பாரம்பரிய பங்கு முதலீட்டு உத்திகளைக் (traditional equity strategies) கொண்டிருக்கிறது. அது, நல்ல தரமான கருப்பொருள் மியூச்சுவல் ஃபண்ட்களை முதலீட்டாளரின் பார்வையிலிருந்து பூர்த்தி செய்கிறது.  கருப்பொருள் ஃபண்ட்கள் (Thematic funds) சந்தையின் குறிப்பிட்ட கருப்பொருள்கள் அல்லது பிரிவுகளை குறிவைத்து, முதலீட்டாளர்கள் தாங்கள் வலுவாக நம்பும் அல்லது அவர்களின் பாரம்பரிய பங்கு ஒதுக்கீடுகளை பூர்த்தி செய்யக்கூடியவையாகும். கருப்பொருள்களை (நிலைத்தன்மை அல்லது இடையூறு போன்றவை) அணுக அதிக திறனை அனுமதிக்கின்றன.

ஆக்ஸிஸ் .எம்.சி நிறுவனம்,  ஆக்ஸிஸ் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஃபண்ட், புதிய ஃபண்ட் வெளியீட்டை  அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்த ஃபண்ட், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் யூனிட்களை விற்று பணமாக்கும் வசதி கொண்ட ஓப்பன் எண்டட், பங்குச் சந்தை சார்ந்த திட்டம் (open ended equity scheme) ஆகும். இந்த ஃபண்ட், சீர்குலைக்கும் வளர்ச்சி வாய்ப்புகளை (disruptive growth opportunities) மையமாகக் கொண்ட ஒரு சிறப்பு சூழ்நிலைகள் கருப்பொருளைப் (special situations theme) பின்பற்றுகிறது

இந்த ஃபண்ட், முழு இடையூறு மதிப்பு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்களை அனுமதிக்கும். உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் மற்றும் பரவலாக அனைத்து சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளிலும் இடையூறு மதிப்பு காணப்படுகிறது. இந்த வாய்ப்புகளைப் இந்த ஃபண்ட் கண்டறிந்து அதில் முதலீடு செய்யும். இதனால், முதலீட்டாளர்கள் சந்தையின் எந்தவொரு பிரிவிலும் சரியான வாய்ப்புகளில் முதலீடு செய்ய அனுமதிக்கின்றனர். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து  ஷ்ரோடர்* (Schroder*) நிறுவனம் ஆலோசனை வழங்கும் (இது ஆக்ஸிஸ் ஏ.எம்.சி -ல் சுமார் 25% பங்கு மூலதனத்தை கொண்டிருக்கிறது)

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை Life

🙏உங்கள் இறுதி; ஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்...