மொத்தப் பக்கக்காட்சிகள்

பிஎஸ்இ - நிறுவனர்கள் அடமானம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு ரூ.2.57 லட்சம் கோடி ..!

பிஎஸ்இ - நிறுவனர்கள் அடமானம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு ரூ.2.57 லட்சம் கோடி

பிஎஸ்இ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளில் நிறுவனர்கள் அடமானம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு, 2018 ஏப்ரல் இறுதி நிலவரப்படி ரூ.2.57 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
 இது 2018 மார்ச் மாத இறுதியில் ரூ.2.39 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது 7.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

பிஎஸ்இ பங்குச் சந்தையில் மொத்தம் 5,043 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளம. இதில், 3,142 நிறுவனங்களின் நிறுவனர்கள் அவர்கள் வசம் இருக்கும் பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கி இருக்கிறார்ள்.

சுமார் 350 நிறுவனங்களில் நிறுவனர்கள் 30 சதவிகிதம் வரை பங்குகளை அடமானம் வைத்துள்ளார்கள்.

150 நிறுவனங்களின் நிறுவனர்கள் அவர்களின் பங்குகளில் 30 முதல் 50 சதவிகிதம் அடமானம் வைத்துள்ளார்கள். 

80 நிறுவனங்களின் நிறுவனர்கள் அவர்களின் பங்குகளில் 50 முதல் 75 சதவிகிதம் அடமானம் வைத்துள்ளார்கள்.

3 நிறுவனங்களில் 90 சதவிகிதம் வரை பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது.

மிக அதிகமாக பங்குகள் அடமானம் வைக்கப்பட்டிருக்கும் நிறுவனப் பங்குகளில் மிகவும் உஷாராக இருப்பது நல்லது என்கிறார்கள் பங்கு பகுப்பாய்வாளர்கள்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...