வருமான வரிக் கணக்குத் தாக்கல்: கால அவகாசம் 2025 செப்டம்பர் 15 வரை நீடிப்பு
2024-25 நிதியாண்டு வருமான
வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை 2025 செப்டம்பர் 15 வரை
நீடிக்கப்பட்டுள்ளது..
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம்
ஜூலை 2025 31 வரை இருந்த நிலையில் தற்போது 2025 செப்டம்பர் 15 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
ஐடிஆர் (ITR) படிவங்களில் செய்யப்பட்ட
கணிசமான புதுப்பிப்புகள், வரிக் கணக்குத் தாக்கல் சிஸ்ட அமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள்
மற்றும் டிடிஎஸ் கிரெடிட் தாமதம் ஆகியவை காரணமாக இந்த நீட்டிப்பு
செய்யப்பட்டிருக்கிறது.