குறைந்தபட்ச எஸ்ஐபி தொகை ரூ1,000: ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிஃப்டி 200 க்வாலிட்டி 30 இண்டெக்ஸ் ஃபண்ட்..!
சிறப்பம்சங்கள்:
·
இந்தத் திட்டம் நிஃப்டி
200 குவாலிட்டி 30 குறியீட்டை பிரதி எடுத்து செயல்படும்.
பங்கு மூலதனம் மீதான அதிக வருமானம், நிதி ஆதாயம் மற்றும்
நிலையான வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டை இந்தத் திட்டம் மேற்கொள்ளும்.
இந்த அளவீடுகள் திறமையான மூலதன ஒதுக்கீடுகள் மூலம் தரமான நிறுவனங்களில் முதலீட்டை
மேற்கொள்ள உதவுகிறது.
·
அதிக தரத்திலான 30
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பாஸிவ், விதிமுறைகள்
அடிப்படையிலான அணுகு முறையை பின்பற்றி வெளிப்படை தன்மை மற்றும் தொடர் முதலீடு மேற்கொள்ளப்படும்.
·
சரியான மதிப்பில் அதிக
தரம் வாய்ந்த பங்குகள் கிடைக்கும் இந்தத் தருணத்தில் இந்தத் திட்டம்
முதலீட்டாளர்களுக்கு வலுவான நிறுவனங்களில் முதலீடு செய்து நீண்டகால செல்வத்தை
சேர்ப்பதற்கு நல்ல வாய்ப்பை அளிக்கிறது.
·
ஐசிஐசிஐ புருடன்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் (ICICI Prudential Mutual Fund) நிறுவனம்
ஐசிஐசிஐ புருடன்ஷியல் நிஃப்டி 200 குவாலிட்டி 30 ஃபண்ட் (ICICI Prudential Nifty200
Quality 30 Index Fund) என்ற பெயரில் நிஃப்டி 200 குவாலிட்டி 30 குறியீட்டை பிரதி எடுத்து முதலீடு
செய்யும் புதிய ஓபன் என்டட் திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
முதலீட்டின் மிக முக்கிய தூண்களில் ஒன்றான தரத்தினை அடிப்படை
யுக்தியாக பின்பற்றும் இந்தத் திட்டம் வலுவான வணிகம் மற்றும் அடிப்படையை கொண்ட
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
தரம், வேகமான வளர்ச்சி,
குறைந்த ஏற்ற இறக்கங்கள், மதிப்பு வாய்ந்த
பெரிய நிறுவனங்களில் சரியாக ரிஸ்கை கணித்து முதலீடு செய்வதன் மூலம் கூடுதல்
வருமானம் கொடுப்பதை இலக்காக இந்தத் திட்டம் கொண்டுள்ளது. நிஃப்டி 200 குறியீட்டில்
உள்ள 30 தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக தரத்தை கொண்ட பங்கு மூலதனம் மீதான கூடுதல் வருமானம்,
குறைந்த கடன் பங்கு அளவு மற்றும் நிலையான வளர்ச்சி கொண்ட நிறுவனப்
பங்குகளில் முதலீடு மேற்கொள்ளப்படும்.
இந்த அறிமுகம் வாயிலாக முதலீட்டாளர்கள் தரத்தை அடிப்படையாகக் கொண்ட அதிக திறன், நெகிழ்த்தன்மை மற்றும் நிலைத்தன்மை கொண்ட நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்ள முடியும். கடந்த கால பங்குச் சந்தை சரிவில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு முதலீடு மேற்கொள்ளப்படும்.
கடந்த காலங்களில் சந்தை அதிகம் சரிவை சந்தித்த, உலக சந்தைகள் வீழ்ச்சி (2015-16), கொரோனா
பெருந்தொற்று (2020), யுக்ரைன் மீதான ரஷ்யா போர் (2021-22)
போன்ற காலகட்டங்களில் நிஃப்டி 200 குவாலிட்டி 30
குறியீடு சிறப்பாக செயல்பட்டு உள்ளது.
இந்தத் திட்டத்தில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்:?
·
வெளிப்படைத்தன்மை
மற்றும் விதிமுறை சார்ந்த முதலீடு: பங்குகள் தேர்வு மற்றும் அதன் வெயிட்டேஜ்
ஆகியவை அது சார்ந்துள்ள குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே எடுக்கப்படும்.
·
குறைந்த
கட்டணம்: இது ஒரு பாஸிவ் திட்டம் ஆதலால் இதன் செலவு விகிதம் குறைவு
·
எஸ்ஐபி, எஸ்டிபி, எஸ்டபிள்யூபி வழிமுறைகளில் சுலபமாக
முதலீட்டை மேற்கொள்ளலாம்.
·
சந்தை
சரிவு காலகட்டத்தில் சிறப்பான செயல்பாட்டை கொண்டிருப்பது.
முக்கிய அம்சங்கள்: :
முதலீட்டு
அணுகுமுறை: இது நிஃப்டி 200 குவாலிட்டி 30 குறியீட்டை பிரதி எடுத்து முதலீடு செய்யும் ஒரு திட்டம். இந்த குறியீட்டில் வங்கி மற்றும்
நிதி துறை சாராத நிறுவனங்களில் குறைந்த கடன் பங்கு அளவு மற்றும் அதிக வளர்ச்சி
வாய்ப்புள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களில்
பங்குகளின் மீதான அதிக வருவாய் மற்றும் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள நிறுவனங்களில்
முதலீடு மேற்கொள்ளப்படும்.
முக்கிய துறைகள்: ஏப்ரல்
30, 2025 தரவுகளின் படி எஃப்எம்சிஜி, தொழில்துறை,
நிதித்துறை, தகவல் தொழில்நுட்பம் போன்ற
பல்வேறு முன்னணி துறைகளில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது
ரோலிங் ரிட்டன்: கடந்த 1,5 மற்றும் 10 ஆண்டு காலகட்டத்தில் நிஃபடி 200 குவாலிட்டி 30 TRI
சராசரியாக நிஃப்டி 50 TRI மற்றும் நிஃப்டி 200
TRI குறியீடுகள் வழங்கியுள்ள வருமானத்தை விட அதிக வருமானத்தை
தந்துள்ளது.
நீண்ட கால நோக்கில் சிறப்பான செயல்பாடு: ஏப்ரல் 30, 2025 தரவுகளின் படி நிஃப்டி 200 குவாலிட்டி
30 குறியீடு CAGR அடிப்படையில் 18% வருமானத்தை அளித்துள்ளது.
இதற்கு மாறாக நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி 200 குறியீடுகள் 14.5% CAGR வருமானத்தை மட்டுமே அளித்துள்ளன.
திட்ட விவரங்கள்::
·
எக்ஸிட் லோட் - ஏதும் இல்லை
·
குறைந்தபட்ச எஸ்ஐபி தொகை - ரூ 1,000 (குறைந்தது 6 தவணை அவசியம்)
·
பெஞ்ச் மார்க்: நிஃப்டி 200 குவாலிட்டி
30 குறியீடு
ஃபண்ட் மேனேஜர்:
Mr. நிஷித் பட்டேல் மற்றும் Ms அஸ்வினி ஷிண்டே
* (தினம், வாரம், 15 நாட்கள், மாதம்
மற்றும் காலாண்டு அடிப்படையில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாம். காலாண்டு அடிப்படையில் முதலீடு செய்வதற்கு குறைந்தது 4 தவணைகள் அவசியம்).
என்எஃப்ஓ காலம்: மே 21,20225 முதல் ஜூன் 5,2025 வரை
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய..!
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ்,
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
திரு. ஆர். வெங்கடேஷ்,
நிறுவனர், www.gururamfinancialservices.com
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்.
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (GURURAM
FINANCIAL SERVICES PRIVATE LIMITED)
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ் ,
நாணயம் விகடன், அவள் விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க
http://www.gururamfinancialservices.com/my-articles.php
தொடர்பு கொள்ள
(Contact)
Mr. R Venkatesh
AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017
Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com
http://www.gururamfinancialservices.com/