மொத்தப் பக்கக்காட்சிகள்

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும் life



''இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால்.. ''.

சிலருக்குத் தேவைக்கு அதிகமாகப் பணம் இருந்தும் மனக் கவலை, மன இறுக்கம், மன உளைச்சலுடன் இருப்பார்கள். இவர்கள் மனதளவில் எதைக் கண்டும் திருப்தியடைய மாட்டார்கள்.

ஆனால் மகிழ்ச்சி என்பது தேடித்தேடி சேர்க்கும் பொருட்களில் இல்லை. தேடிய செல்வம் அளவுக்கு அதிகமாக சேர்ந்தாலும் இறுதிக்காலத்தில் உடன் வராது.

வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் முக்கியமான மகிழ்வுகளை இழந்து விடுகிறார்கள்... பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு முடிவுரையாகும்.

ஒர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது.

ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர்.

இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, புதையலைத் தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்றான்..

தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழம் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான்.

அதுவரை வியாபாரத்தின் மீது முழுக் கவனம் செலுத்திய அவன் புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

புதையலை பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டு இருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது.

அதனால் ஏமாற்றம் அடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார்.

பின் அவனிடம் உன்னிடம்,'' இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதை விட்டு, இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் துயரம் தான்'' ஏற்படும் என்றார்

ஆம்.,தோழர்களே..
பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது.

குடிசையில் வாழ்ந்து கூழைக் குடிப்பவர்கள்  மகிழ்வுடன் வாழ்கிறார்கள்.

அவர்கள் பொருளாதார நிறைவைப் பொருட்படுத்தாது மனநிறைவோடு வாழ்கிறார்கள்.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும்
*திறவுகோல்..✍🏼

*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
*╔═════≪•❈•≫═════╗*
   📶📶📶📶📶📶📶
*╚═════≪•❈•≫═════╝*

*📶எந்த செயல் செய்தாலும் ஒர் நேர்மை, நியாயம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் வாழ்வில் பல மடங்கு வளர்ச்சியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.*

*📶பொதுவாக எந்த ஒரு வேலையையும் தொடங்குவதற்கு முன்னால் ஒரு திட்டம் யோசித்தால் போதாது. ஒரு வேளை அது சொதப்பி விட்டால் என்ன செய்வது என்கிற இரண்டாவது திட்டத்தையும் யோசித்து வைத்து விட வேண்டும்.*

*📶மகிழ்ச்சியாக இருக்க எதுவும் செய்யலாம் தப்பில்லை. ஆனால் தவறுகள் செய்து தான் மகிழ்ச்சியாக இருக்கணும் என்ற அவசியம் இல்லை.*

*📶உயர்வான எண்ணங்களைக் கொண்டு, உயர்வான செயல்களைக் கொண்டு, உயர்வான வழியில் நடந்தால் உயர்வான வாழ்வு அமையும். அதுவே இறைவழி.*

*╔═════≪•❈•≫═════╗*
   📶📶📶📶📶📶📶
*╚═════≪•❈•≫═════╝*
*நல்லதே நினை.* 
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வையகம் வாழ்க வளமுடன்* 
*வாழ்க நலமுடன்*

*இனிய காலை வணக்கம்* 🙏 

*அன்புடன் ஏ.சுந்தரராஜன்*
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...