மொத்தப் பக்கக்காட்சிகள்

ஏற்றுமதி - இறக்குமதியை ரூபாயிலேயே மேற்கொள்ளலாம் - மத்திய அரசு Export import

ஏற்றுமதி - இறக்குமதியை ரூபாயிலேயே மேற்கொள்ளலாம் - மத்திய வர்த்தகக் கொள்கையில் மத்திய அரசு திருத்தம்

ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான பணப் பரிவர்த்தனையை ரூபாயிலேயே மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வெளிநாட்டு வர்த்தக  கொள்கையில் புதிய திருத்தம் செய்துள்ளது.

 இனி இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளுடனான பணப் பரிவர்த்தனையை இந்திய ரூபாயிலேயே மேற்கொள்ள முடியும்.

தற்போது இந்தியா அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பெரும்பான்மையாக அமெரிக்க டாலரில் மேற்கொண்டு வருகிறது. இதனால், இறக்குமதி அதிகமாகும் சமயத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும்  குறைகிறது.


மேலும், அமெரிக்கடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைகிறது.

 இது தவிர, அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபடுவதும் பிரச்சனை நிறைந்ததாக உள்ளது.


இந்தச் சூழலை மாற்றி அமைக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இந்திய வங்கிகள் வோஸ்ட்ரோ கணக்குகள் திறப்பதன் மூலம் வெளிநாடுகளுடன் இந்திய ரூபாயிலேயே வர்த்தகம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...